பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காக்கைபாடினியார், தற்றத்தனார், வாமனனார் என்போர். இன்ஞேர் பன்னிருவரும் தனித்தனி, நூல் இயற்றியமை யோடு எல்லோருஞ் சேர்ந்து புறப்பொருள் பன்னிருபடலம் என்னும் நூல் ஒன்று இயற்றியுள்ளனர் என்றும் தெரி கிறது. இதனை, 'மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலையிருந்த சீர்சால் முனிவரள்' - தன்பாற் றண்டமிழ் தாவிள் துணர்ந்த துள்ளருஞ் சீர்த்தித் தொல்காப்பியன் முதல் பன்னிரு புலவகும் பாங்குறப் பகர்ந்த' - - பன்னிரு படலம் பழிப்பிள் றுணர்ந்தோன்'. என்ற புறப்பொருள் வெண்பாமாலைப்பாயிரத்தினால் நன்குணரலாம். அந்நூல் இந்நாளில் யாண்டும் கிடைக் காமையால் அழிந்து போயிற்று , என்பது ஒருதலை. எனினும், அதன் வழி நூலாக இக்காலத்தில் கிடைத் திருப்பது, சேரமன்னராதிய, ஐயனாரிதனார் என்பார் இயற்றிய புறப்பொருள் வெண்பாமாலை என்னும் அரிய நூலேயாம். மேலே குறிப்பிட்டுள்ள மாணவர் பன்னிரு வருள், தொல்காப்பியனார் இயற்றிய தொல்காப்பியம் என்னும் நூல் ஒன்றுதான் இந்நாளில் உளது. மற்றை யோர் எழுதிய நூல்கள் கிடைக்கவில்லை. எனவே இப் போதுள்ள நூல்களுள் இத்தொல்காப்பியமே மிகப் பழமை வாய்ந்தது என்று கூறலாம். இந்நூலுக்குச் சிறப்புப் பாயிரம் இயற்றியவர். அகத்தியரின் மாணவருள் ஒருவரும் தொல்காப்பியனாரின் ஒருசாலை மாணவரும் ஆகிய பனம் பாரனார். ஆவர். இனி, ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாகிய சிலப்பதி