பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஒன்றே இவர்து சிவபக்தியையும் பெருமையையும் தன்கு புலப்படுத்தும் எனலாம். ! இனி, சைவ சமயாசாரியருள் ஒருவராகிய சுந்தர மூர்த்திகள், சிவபெருமான் அகத்தியர்க்கு அருள் புரிந்த சிறப்பைத் திருநின்றியூர்ப் பதிகத்திலுள்ள ஒரு பாடலில் கூறியுள்ளனர். அது, - "வந்தோ ரித்திரன் வழிபட மகிழ்ந்து -- வான நாடுநீ யாள்கென அருளிச் - - சந்திமூன்றிலுத் தாபர நிறுத்திக் , சகளி செய்திறைஞ் சகத்தியர் தமக்குச் சிந்துமாமணி யணிதிருப் பொதியிற் சேர்வு நல்கிய செல்வங்கண் டடைந்தேன்... செந்தண் மாமலர்த் திருமகள் மருவுஞ் செல்வத் தென்றிரு நின்றியூ ரானே.” என்பதாம். 7... அகத்தியனார் இயற்றிய அகத்தியம் என்னும் - நூலைப்பற்றிய சில குறிப்புகள் :இம்முனிவர் பிரான் இயற்றிய " அகத்தியம்' என்ற நூல் இப்போது காணப்படவில்க, 'எனவே அத்நூல், ஒன்று இருந்ததோ இல்லையோ என்ற ஐயப்பாடு நிகழ்வது இயல்பேயாம். ஆனால் அந்நூல், தலை, இடை கடை என்னும் மூன்று சங்கத்தார்க்கும் இலக்கண நூலாயிருந்த தென்று.. இறையனாரகப்பொருளுரை - கூறுகின்றது. இடைச் சங்கத்தார்க்கும் கடைச்சங்கத்தார்க்கும் இலக்கண, நூலா யிருந்தது என்று அவ்வுரை கூறுகின்ற தொல், காப்பியம் இப்போதும் இருப்பது யாவரும் அறிந்ததேயாம்..