பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 இலக்கிய ஏந்தல்கள் கேட்கிற ஒரு பண்பை, இச்சமூகம் பெறவேண்டும். ஆக்ஸிஜனும், ஹைடிரஜனும் கலந்த கலப்பே தண்ணி ராதல் போல ஆணும் பெண்ணும் சேர்ந்தமைவதே வாழ்க்கை எனக் கருதும் நடுவுநிலை மனம் எல்லார்க்கும் வேண்டும் நீயொரு பாதி இங்கு நானொரு பாதி இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி, என்று கூறுவது போல ஒருவரின தாழ்வு மற்றவரின் உயர்வு ஆகாது என உணரும் மனநிலை உருவாக நாம் குரல் கொடுப்போம்.