பக்கம்:இலக்கிய தீபம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

-92 இலக்கிய தீபம் சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவ ளுயீர்தவச் சிறிது காமமோ பெரிதே என்று அடிவரையறை செய்தல் வேண்டும். முனா அது, யானையுண் குருகின் கானலம் பெருந்தோ டட்ட மள்ள ரார்ப்பிசை வெரூஉம் என்றிருக்க வேண்டுவது, (குறுந். 34) முனாஅ தியானையுண் குருகின் கானலம் பெருந்தோட்ட மள்ள ரார்ப்பிசை வெரூஉம் எனப் பதிப்பிக்கப்பெற்றுள்ளது. வெண்கோட் டியானை சோணை படியும் பொன்மலி பாடலி பெறீஇயர் (குறுந்.75) என்றிருக்க வேண்டும் அடிகள் வெண்கோட்டியானை பூஞ்சுனை படியும் பொன்மலி பாடிவி பெறீஇயர் என்று காணப்படுகின்றது. ஏந்துகோட்டியானைச் சேந்தன் றந்தை அழிசி யார்க்கா டன்ன விவள் குறுந்.278) என்றிருக்கற்பாலது ஏந்துகோட் டியானைச் சேந்த னுறந்தை எனப் பதிப்பிக்கப்பட்டது. பதிப்பிலுள்ள பிழைகள் இவ்வாறுள்ளன. இவர் உரைவகுக்குந் திறத்திற்கு ஒருதாரணம் காட்டுகின்றேன்: C முந்தூழ் வேலிய மலைகிழ வோற்கே' (குறுந்.239) என்ற அடிக்கு 'முந்தும் முறைமையாகிய காவலையுடைய மலைக்குரியான் றிறத்து' என்று உரை வகுத்தனர். முந் தூழ் என்பது மூங்கிலின் பெயராகும். இங்ஙனமாக எத்தனையோ பெரும்பிழைகள் காணப் படினும் சௌ. அரங்கனாரை நாம் போற்ற வேண்டியவர்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/101&oldid=1481701" இலிருந்து மீள்விக்கப்பட்டது