பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 இலக்கியவகையின் வளர்ச்சியும் மேலுமாகிக் சீழுமாகி வேறுள திசையுமாகி, விண்ணுமண்ணு மானசக்தி வெள்ளம் - இந்த வித்தையெல்லாம் ஆங்கது செய் கள்ளம் - பழ வேதமா யதன் முனுள்ள நாதமாய் விளங்குமிந்த வீரசக்தி வெள்ளம் விழும் பள்ளம் ஆக வேண்டும் நித்த மென்றனேழிை யுள்ளம். (1) இது காவடிச் சிந்து. காவடியைக் கழுத்தில் சுமந்து உடலையும் உடலுறுப்புகளையும் பல்வேறு விதமாக இயக்கி ஆடும்போது ஆட்டத்திற்கேற்றவாறு பாடும் பாட்டு இது. சென்னி குளம் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து மிகுபுகழ் பெற்றது. * தமிழுக்குத் தகுஉயர்வு அளிக்கும் தலைவன்’ என்று பாரதியைச் சுட்டும் பாவேந்தர், பைந்தமிழ் தேர்ப்பாகன் அவனொடு செந்தமிழ்த் தேனி, சிந்துக்குத் தந்தை என்று போற்றிப் புகழ்வதை ஈண்டு நினைவு கூர்கின் றோம். தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன் அன்றோ இவன்? மேலும் இந்த முற்போக்குக் கவிஞ னைக் கவிஞர் வாலி, பண்டிதர்கள் கடத்திச் சென்ற பைந்தமிழ்க் குழந்தையைக் கண்டு பிடித்துக் கொடுத்த காவல் நிலையம்.' என்று காட்டுவதையும் சிந்திக்கின்றோம். SATSAAA TTeMAAAS SAAAAAA LL AAAACHS S HSCCSASHHHHHSACCHHSLLLS 11. பாரதியார் : தோ. பர். 38. மகா காளியின் புகழ். 12. பொய்க்கால் குதிரைகள் - பாரதிபிள்ளையார் சுழி - பக். 72.