பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

23

3. இலங்கை சர்க்கார் இலங்கையின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யப் பர்மாவிலிருந்து அரிசியும் ஆஸ்திரேலியாவிலிருந்து கோதுமை மாவும் தருவிக்கிறார்கள். இதற்காக அந்த நாடுகளுக்கு இலங்கை சர்க்கார் பணம் அனுப்புவது அவசியம் அல்லவா?

இந்தியாவில் நாம் வெளி நாடுகளிலிருந்து உணவுப் பொருள் தருவிப்பதை நிறுத்தப் பார்க்கிறோம். வெளி நாடுகளிலிருந்து உணவுப் பொருள் தருவித்து அதற்காகப் பணம் அனுப்பினால் இந்தியாவின் பொருளாதார நிலையை அது பாதிக்கிறது. ஆகையால் உணவு இறக்குமதியை நிறுத்த வேண்டும் என்று நமது தலைவர்கள் சொல்கிறார்கள்.

ஆனால் இந்த மாதிரிக் கவலை இலங்கை சர்க்காருக்குக் கிடையாது. இலங்கையிலிருந்து தேயிலையும், ரப்பரும் ஏராளமாக அயல் நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இதற்காக அயல் நாடுகளிலிருந்து ஏராளமான பணம் இலங்கைக்கு வரவேண்டியதாயிருக்கிறது. இப்படி வர வேண்டிய தொகையில் ஒரு பகுதியை அரிசியும் கோதுமை மாவும் தருவித்துக் கொள்ள உபயோகப் படுத்துகிறார்கள். இதனால் இலங்கை சர்க்காரின் பொருளாதார நிலைமை பாதிக்கப் படுவதில்லை.

அரிசியும் கோதுமை மாவும் தேவைக்குக் கொஞ்சம் அதிகமாகவே, தருவித்து வைத்திருக்கிறார்கள். எனவே, பத்தாயிரம் டன் அரிசி இப்போது கடன் கொடுத்துப் பிறகு திரும்பப் பெற்றுக் கொள்வதில் இலங்கை சர்க்காருக்கு யாதொரு கஷ்டமும் இல்லை. ஒரு வேளை கொஞ்சம் சௌகரியங்கூட இருக்கலாம்.

“இந்தியாவில் பஞ்சம் தாண்டவ மாடியபோது நாங்கள் தானே உதவி செய்தோம்? இங்கே நீங்கள்

இல. 2