பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்★ 201



கண்ணாடி பீரோவைத் துடைத்துக் கொண்டிருந்தவள் தன் முகத்தைப் பார்த்துவிட்டுத் திடுக்கிட்டாள். காதோரம் மீண்டும் ஒரு புள்ளி. இப்போது ஒரளவு அது கூர்மைப்பட்டு சிவந்திருந்தது. இன்னொரு மங்கலான புள்ளி. அப்படியானால்.

மாத்திரைகளின் நினைவு இப்போதுதான் நிஷ்டுரமாக வந்தது. இந்த வீட்டில் உண்மையை மறைக்கக் கூடாது. மறைத்தால் பாவம். தெரிவித்தால், காமாட்சி குறைந்த பட்சம் சொன்னவுடனேயாவது ஒன்று ஒப்பாரி வைப்பாள், அல்லது திட்டித் தீர்ப்பாள். நிலைமையை இப்படியே விடக்கூடாது. ஒருவேளை. இந்த சின்னஞ்சிறு செவ்வரளிப் பூக்களுக்கும் தொத்தக்கூடாது. தொற்றுமோ தொற்றாதோ இந்த குழந்தைகளுக்கு கிலி பிடிக்கக்கூடாது. காமாட்சியின் ஹிஸ்டிரியா பிரேக்டவுனாகி விடக்கூடாது. 'கூத்து கோவிந்தன் வந்ததும் அவனிடம் சொல்லி எங்கேயாவது போக வேண்டும். எந்த மடமோ, எந்த ஊரோ எப்படியோ போக வேண்டும். கோவிந்த அண்ணன் வந்தாலும் சரி. வராவிட்டாலும் சரி போயாக வேண்டும்.

இரண்டு மூன்று நாட்கள் அவள் ஒதுங்கி ஒதுங்கி பிள்ளைகளை விட்டு விலகி விலகி அவர்களையும் அம்மாவையும் பிரியப் போகிறோமோ என்று கலங்கிக் கலங்கி தவித்துக் கொண்டிருந்தாள்.

நான்காவது நாள், 'கூத்து கோவிந்தன் வந்தான். கூடவே வெங்கடேசன் வந்தான். அந்தச் சூழலிலும் மணிமேகலை ஆனந்த மயமானாளா அல்லது சோக மயமானாளா என்று சொல்ல முடியாது. எப்படியோ ஒரு ‘மயமானாள்.'

வெங்கடேசன் அவளையே வெறித்துப் பார்த்தான். 'உனக்கா. உனக்கா, என் மணிமேகலைக்கா...? என்று