பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222 ★ இல்லம்தோறும் இதயங்கள்




ஏன் யோசிக்கிங்க? ஒஹோ! நகையை என் கையில் கொடுத்தால் என் கையில இருக்கிற நோய் தொத்திடும்னு நினைக்கிங்களோ? பரவாயில்ல! கையில உறை போட்டுக்கிறேன். எனக்கு இப்போ பதில் தெரிஞ்சாகணும்."

வாயும் வயிறுமாக இருந்த வசந்தி உள்ளே இருந்த படியே முணுமுணுத்தாள்.

"பையன் எங்க கிட்டதானே இருக்கான். அவனுக்கு வேண்டாமா ?” 'கூத்து கோவிந்தனால் தாங்க முடியவில்லை.

"வாம்மா ராசாத்தி! நான் மூளியலங்காரி மூதேவி சண்டாளியாய், அதாவது நல்லதங்காளோட அண்ணியா நடிக்க ஆள் கிடைக்காமல் அவஸ்தப்படுறேன். வாரி யாம்மா! சீ! நீயில்லாம் ஒரு பொண்ணா? இருக்க இடம் கொடுத்த தங்கச்சிகிட்ட படுக்க இடத்த பறிச்ச முண்ட! ஒன்னை மாதுரி பொண்ணுங்க இருக்கதனால தான் நானே நாடகத்துல பெண் வேஷம் போட்டுக்கிறேன். பொண்ணு என்கிற வார்த்தைக்கே தகுதியில்லாத அரக்கி." ஜெயராஜ் மணிமேகலை தனியாக வந்திருந்தால் இந்நேரம் தலைமுடியைப் பிடித்திழுத்து உதைத்திருப்பான். வசந்தியும் அவனுக்கு ஒத்தாசை செய்திருப்பாள். ஆனால்.

மணிமேகலைக்கே கூத்து கோவிந்தன்மீது கோபம் ஏற்பட்டது.

"நமக்கு யாரையும்-அவங்க எவ்வளவு பெரிய பாவியாய் இருந்தாலும்-இழிவுபடுத்துறதுக்கு உரிமை கிடையாது. இதுதான் நான் 'அம்மா'கிட்ட கத்துக்கிட்ட பாடம். கோவிந்தண்ணே நீ இனிமேல் வாயைத் திறக்கக் கூடாது. வசந்தி! மன்னிச்சிடும்மா, மிஸ்டர் ஜெயராஜ்! நான் கேட்ட கேள்விக்கு நீங்க ரெண்டுல ஒண்ணு பதிலாய் சொல்லியிருந்தால் இந்த ரகளையே வந்திருக்காது.