பக்கம்:இல்லற நெறி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம் I 73

கருக் குழல்களை அடைகின்றன, மானிட இனத்தில் இந்தச் செயல் நடைப்பெறுவதைப் படம் (படம்-22) விளக்குகின் றது. படத்தை உற்றுநோக்கி விளக்கம் பெறுவாயாக.

விந்தனுக்கள் கருப்பையில் நுழைதல்: மனிதன் இணை விழைச்சின் பொழுது வெளியாக்கும்.விந்து பசைபோல் தடித் திருக்கும் என்பதையும் சில நிமிடங்களில் அது நீர் நிலையை அடைகின்றது என்பதையும் நீ அறியாய். இவ்வாறு நீர் நிலையை அடைந்ததும் விந்தனுக்கள் விரைவாக நகர்ந்து கருப்பையை அடைகின்றன. புணர்ச்சி முடிந்து பத்து நிமிடத்திற்குள் இவை புகுவதை கருப்பையின் சுற்றுப் பகுதி யைச் சோதித்து அறியலாம். விந்தணுக்கள் கருப்பையை அடைவதற்கு அவற்றின் அசைவு ஒரு முக்கியக்கூறு என்பது உனக்குத் தெரியும். விந்தனுக்கள் நிமிடமொன்றுக்கு; அங்குலம் நகர்ந்து செல்லும் என்பதை நீ அறிவாய். விந்து பாயும் இடத்திலிருந்து கரும்பையின் வாய் ஒரங்குல தூரத் திற்குள்ளாகவே இருப்பதால், விந்தணுக்கள் விந்து பாய்ந்த ஒரு சில நிமிடங்களில் கருப்பையை அடைந்து விடும். எனி னும், வேறு பல கூறுகளும் இத குத் துணை செய்கின்றன. விந்து பாய்ச்சும்பொழுதும் அதற்குப்பின்னரும் ஆண் குறி யின் அசைவுகளால் விந்து பாய்மத்தின் ஒரு பகுதி கருப் பையின் வாயினை அடையலாம்; ஒன்று அல்லது இரண்டு துளிகள் வாயிலேயே செலுத்தப்பெறவும் நேரிடலாம். மேலும், இணைவிழைச்சின்பம் உச்ச நிலையை அடையுங்கால் யோனிக்குழலின் தசை சுருங்குவதால் யோனிக் குழலும் கருப்பையும் நெருக்கமுற்று விந்தணுக்கள் கருப்பையின் கழுத்துப் பகுதியினுள் நுழைவதைத் துரிதப்படுத்தலாம்: இன்னும் இணை விழைச்சால் பெண்ணிடம் ஏற்படும் உச்ச நிலை உணர்ச்சியின்பொழுது கருப்பை ஒருவித சந்த இயக் கத்துடன் விரிந்து சுருங்கி உறிஞ்சுவதுபோன்ற செயலைப் புரி கின்றது என்றும், இதல்ை விந்துப்பாய்மத்தின் ஒரு பகுதி உள்நோக்கி இழுக்கப்பெறுகின்றது என்றும் சிலர் கருது கின்றனர். ஆயினும், இதுபற்றி நம்பகமான சோதனை முடி வுகள் இன்னும் தெளிவாக அறியப்பெறவில்லை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/179&oldid=597940" இலிருந்து மீள்விக்கப்பட்டது