பக்கம்:இல்லற நெறி.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம் 191

களுக்கும் ஒத்து வருவதில்லை. கருப்பையின் வளர்ச்சியைத் தொட்டுப் பார்த்து ஒருவாறு பிரசவம் ஏற்படும் நாளே மருத் துவர்கள் கணக்கிடுகின்றனர். முதன்முதலாக சிசு சுமார் பதினெட்டாவது வாரத்தில் அசையத் தொடங்குகின்றது என்று மருத்துவர்கள் வைத்துக்கொள்ளும் கணக்கும் சரி யாக வருவதில்லை. சிசு அசைவு நாளுடன் இருபத்திரெண்டு வாரங்களைக் கூட்டினல் வரும் நாளன்று கருவுயிர்ப்பை எதிர் பார்க்கலாம்என்பது இவர்கள் கணக்கு தனக்கு சிசு முதலில் எப்பொழுது அசையத் தொடங்கியது என்று பெரும்பா லான பெண்களுக்கு நினைவே இருப்பதில்லை. குழந்தை இடுப் பெலும்புக்கட்டினுள் இறங்கிவிட்டதைக்கொண்டு மருத்து வர்கள் ஒரு வாறு கருவுயிர்க்கும் நாளை அறுதியிடுகின்றனர்; முதற் பிரசவத்தில், குறைந்தது இரண்டு வாரங்கட்கு முன்பே, குழந்தையின் தலை இடுப்பெலும்புக்கட்டினுள் பொருந்திக்கொண்டு விடுகின்றது. இரண்டாவது மூன்ருவது தடவையாகப் பிரசவிக்கும்பொழுது பிரசவ வேதனை தொடங்கும் சிலமணி நேரங்களுக்கு முன்புதான் தலை இடுப் பெலும்புக் கட்டினுள் பொருந்துகின்றது. இவற்றை அடிப் படையாகக்கொண்டு பிரசவ நாளை அறுதியிடலாம் என்ரு லும், இந்தமுறையும் முழுவெற்றியினை அளிப்பதில்லை. மருத் துவர், பிரசவிக்கும் நாளை ஒருவாறு குறிப்பிடலாமே அன்றி பிரசவிக்கும் நேரத்தை அவரால் அறுதியிட முடியாது. இதனை நன்கு அறிந்தே மூத்தோர்கள், "மழைபொழியும் நேரமும் மகப்பேறு ஏற்படும் நேரமும் மகாதேவனுக்கும் தெரியாது’ என்று வழங்கும் பழமொழி எல்லா உண்மை களையும் தெளிவாக்குகின்றது.

இனி, அடுத்த கடிதத்தில் கருப்ப காலத்தில் கருப் பிணிக்கு நேரிடக்கூடிய சில அபாயகரமான கோளாறுகள் பற்றிய செய்திகளை ஒரளவு விரிவாக விளக்குவேன்.

அன்புள்ள, திருவேங்கடத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/197&oldid=597970" இலிருந்து மீள்விக்கப்பட்டது