பக்கம்:இல்லற நெறி.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

இல்லற நெறி


24

அன்பார்ந்த செந்தில்வேலனுக்கு, நலன். நலன் தெரிவிக்க.

பெண் முறைகளின் நோக்கம்: விந்துப் பாய்மம் யோனி வாயிலினுள் நுழையாமல் தவிர்ப்பதே ஆண் முறைகளின்’ நோக்கம் ஆகும் என்பதை நீ நன்கு அறிவாய்: ஆல்ை, துடிப்புடன் கூடிய விந்தணுக்களை யோனிக் குழலில் செலுத்தி விடுவதனால் மட்டிலும் ஒரு பெண் கருப்பம் உறு வதற்குப் போதுமானதன்று என்பதும் உனக்குத் தெரியும்: விந்தனுக்கள் கருப்பையினுள் சென்று. அங்கிருந்து கருக் குழல்களை அடைந்து அங்கு அவை முட்டையினைச் சந்திக்க வேண்டும் என்று முன்னரே விளக்கியுள்ளேன் அல்லவா? விந்தனுக்கள் யோனிக் குழலிலிருந்து கருப்பையினுள் நுழையாமல் தவிர்ப்பதே பெண் முறைகளின் நோக்கம் ஆகும் என்பதை ஈண்டுக் குறிப்பிட வேண்டும். வேதியியல் முறைகள், பொறி நுட்ப முறைகள் எனப் பெண் முறை கள் இருவகைப்படும். ஆனால், இந்த முறைகள் இரண்டும் இணைந்த நிலையிலே நடைமுறையில் கையாளப் பெறு கின்றன.

எடுஷ் முறை: இன்று எங்கனும் பெரு வழக்கிலிருக் கும் முறை சடுஷ்” முறை என்ற வேதியியல் முறையாகும். புணர்ச்சிக்குப் பின்னர் பெண்ணின் யோனிக் குழலிலிருக் கும் விந்துப் பாய்மத்தை அகற்றுவதே இம்முறையின் தத்துவ மாகும். கருப்பையினுள் நுழைவதற்கு முன்னர் எல்லா விந்தணுக்களையும் "டுஷ்" முறையினால் நீக்கிவிட்டால் அல்லது அழித்துவிட்டால் கருப்பம் ஏற்படாது. 'டுஷ்' செய்யும் நீருடன் புரைமுறி மருந்துசளேக் கலந்து விட் டால் இம் முறை இன்னும் நன்கு பாதுகாப்பளிக்கும்; இதனால் விந்தனுக்கள் அழிக்கப்பெறுகின்றன. ஆனல் சாதாரணமாக, சோப்பு நீரே போதும் என்று அநுபவமிக்க

57. Lysopropol-Antiseptics

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/282&oldid=1285215" இலிருந்து மீள்விக்கப்பட்டது