பக்கம்:இல்லற நெறி.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

இல்லற நெறி


டும். ஆகவே, ஆண்களே மலடாக்குவதைவிடீப் பென்களை மலடாக்குவது சற்றுக் கடினமானது.

புதிர்க்கதிர்களைக் காமச் சுரப்பிகளின் மீது தாக்கும்படி செய்தும் மலடாக்கும் செயல்ை முற்றுவிக்கலாம். எனினும், இம்முறையை எச்சரிக்கையுடனேயே கையாளுதல் வேன் டும். இதன் விளைவுகள் நம்பத்தகாதவையாக இருப்பதுடன் பெண்களிடம் இது மிக்க இளமையிலேயே சூதக ஒய்வினை யும் உண்டாக்கி விடுகின்றது. எனவே, இம் முறை இன்று சூதக ஒய்வினை நெருங்கும் பெண்களுக்கு மட்டிலுமே கொள்ளப் பெறுகின்றது. வயிற்றைக் கிழிக்காமலேயே கருக் குழல்களை அடைக்கும் முறை இன்று கண்டறியப் பெற்றுள்ளது. ஒரு பிரத்தியேகமான கருவி யோனிக்குழல் வழியாகக் கருப்பையினுள் செருகப்பெற்று முதலில் ஒரு கருக்குழலேயும் பிறகு மற்ருெரு கருக் குழலையும் தொடுமாறு செய்யப்பெறுகின்றது, மின்னேட்டத்தைக் கொண்டு இந் தக் குழல்களின் வாயில்கள் அடைக்கப்பெறுகின்றன. இந்த முறை இன்னும் நன்ருக வளர்ச்சி பெறவில்லை.

எதிர்காலத்தில் திரும்பவும் குழந்தை வேண்டும் என்று கருதுகின்றவர்களிடம் வெட்டப்பெற்றகுழல்களைத் திரும்ப வும் இணைக்கும் செயல் மீண்டும் அறுவை முறைமூலம் மேற் கொள்ளப்பெற்றது. பெரும்பாலோரிடம் இது வெற்றி யளிக்கவில்லை. ஒரு தடவை குழல்களை வெட்டி விட்டால் தனியாள் நிரந்தரமாகவே மலடாகி விடுகின்ருர் என்றே கொள்ளவேண்டும்; எனவே, நிரந்தரமான மலடு வேண்டும் என்று கருதுகின்றவர்களே அறுவை மருத்துவ முறையை மேற்கொள்ளுதல் வேண்டும்.

ஹேவ்லக் எல்லிஸ்’’ என்ற அறிஞர் மூன்று காரணங் களுக்காக மலடாக்கும் முறையை ஆதரித்தார்: ஒரு குடும் பத்தில் தேவையான அளவு குழந்தைகள் ஏற்பட்ட பிறகும், இனி குழந்தை பிறந்தால் மனைவியின் உடல் நிலை மிகவும்

& I : ©gs gotia—Menopause * 8: Ggweðavâ srédesteid–Havelock Ellis

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/298&oldid=1285223" இலிருந்து மீள்விக்கப்பட்டது