பக்கம்:இல்லற நெறி.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட்பேறு 总盘婷

கட்குப் பின்னர்தான் அம்முறை பழக்கத்திற்கு வந்தது. இன்று ஒரு சிலவகைக் கருத்தரியா நிலமைகளைச் சமாளிப் பதற்காகவே சில பெண்களிடம் இம்முறை கையாளப்பெறு கின்றது. இதில் அவளுடைய கணவனது விந்துப் பாய்மமோ வேறு ஒர் ஆடவனின் விந்துப்பாய்மமோ பயன்படுத்தப் பெறுகின்றது: கணவனிடம் ஆண்மையில்லா நிலை, பெண் னின் யோனிவாயிலில் அல்லது கருப்பையின் வாயிலில் தடைகள் ஆகியவற்ரு ல் விந்துப் பாய்மத்தைக் கருப்பை யினுள் செலுத்த முடிகின்றதில்லை. இத்தகைய சந்தர்ப்பங் களில் பெண்ணிடம் முட்டை பக்குவப்படும் காலத்தை யொட்டி கணவனின் ஒரு சில விந்துப் பாய்மத் துளிகள் ஒரு பீச்சாங்குழல் மூலம் அவளது கருப்பையின் வாயிலில் நேரடி யாகச் செலுத்தப்பெறுகின்றன. கணவனின் விந்துப் பாய் மம் அளவிலும் தன்மையிலும் சரியாக இல்லாதபொழுது வேறு ஒர் ஆடவனின் விந்து பயன்படுத்தப் பெறுகின்றது.

மேல்நாடுகளில் பிறருடைய விந்துப் பாய்மத்தைப் பயன்படுத்தும் முறை இன்று சிறிது சிறிதாகப் பெருகி வரு கின்றது. கணவனின் கருத்தரிவிக்கா நிலை உள்ள பொழுது, தம்பதிகளிடம் தங்கட்குக் குழந்தை வேண்டும் என்ற அவா நிறைந்திருக்கும் பெழுது அவர்கள் இரு வழிகளை மேம் கொள்ளலாம். ஒன்று: வேருெருவரின் குழந்தையை தத்துப்பிள்ளையாக எடுத்துக்கொள்வது. மற்றென்று : செயற்கையில் விந்துப் பாய்ச்சும் முறையை மேற்கொண்டு குழந்தையைப் பெறுவது. பிற்கூறிய வழியில் பிள்ளைப்பேறு அடைதல் அரைத்தத்து என்று வழங்கப்பெறுகின்றது. ஒரு சிலர் இம்முறையையே விரும்புகின்றனர். ஏனெனில், இவ்வாறு பிறக்கும் குழந்தையிடம் பெற்ருேர் களின் ஒரு வரது பண்புகள் இறங்குகின்றன. ஆனல், தத்துப் பிள்ளை யிடம் இருபாலாரின் குணங்களில் ஒருவரது பண்புகளாவது மரபுவழியாக இறங்குவதற்கு வாய்ப்பே இல்லை. மேலும், குழந்தை பெறவேண்டும், தான் பெற்ற குழந்தையைப்

51, sysng £3gu’-‘Senti adoption"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/335&oldid=598280" இலிருந்து மீள்விக்கப்பட்டது