பக்கம்:இல்லற நெறி.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344

இல்லற நெறி


மருந்துச் சரக்குகளையும் சுரப்பிச்சாரங்களையும் மருத்துவர் கள் உண்ணுமாறு தருகின்றனர். கருப்பத்தின் காரணமாக மாதவிடாய் தடைப்பட்டிருந்தால் இவற்ருல் யாதொரு பய னும் இல்லை. உண்மையாகவே ஒரு பெண் கருப்பம் உற்றி ருந்தால் கருச் சிதைவி ற்கென்றே விற்கப்பெறும் மாத்திரை கள் போன்ற மருந்துகளால் யாதொரு பயனும் இல்லை: இளஞ்சூல் ஏற்கனவே கருப்பையில் நன்முகப் பதித்துக் கொண்டு விம்டபிறகு ஒன்றும் செய்வதற்கில்லை.

கருச்சிதைவு என்பது அறுவை முறைச் செயலாகும். அதனை விளைவிக்க வேண்டுமாயின் கைதேர்ந்த மருத்து வரின் துணைக்கொண்டு கருப்பையினின்றும் இளஞ்சூை அகற்ற வேண்டும்: கருப்பையின் அடிப்பகுதியின் துணிப் பாகம் அகட்டப்பெற்றுக் கருவுற்ற முட்டிைகளையும் அதனைச் சூழ்ந்துள்ள இழையங்களையும் குயூரெட்டோ எனப்படும் ஒரு வகை அறுவைமுறைக் கருவியினல் அகற்று கின்றனர். இந்த அறுவை முறையும் குயூரெட்டேஜ்"ா என்று வழங்கப் பெறுகின்றது. இது மிகவும் வலியினைத் தரும் செயலாதலின் இதில் உணர்வு நீக்க முறையும் மேற் கொள்ளப்பெறுகின்றது: தென் அமெரிக்காவில் ஒருவித மருத்துச் சரக்கினே அடிவயிற்றின் மூலமாகவும் கருப்பை யின் மூலமாகவும் நேரடியாகப் பனிக்குடத்தினுள் குத்திப் புகுத்தி கருத்தடை செய்கின்றனர். இந்த மருந்து இளஞ் சூலைக் கொன்று விடுகின்றதென்றும், மருந்து செலுத்திய சிறிது நேரத்திற்குள் கருப்பிண்டம் வெளிப்படுகின்ற தென்றும் கூறுகின்றனர். இதல்ை தாய்க்கு ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றி இதுகாறும் திட்டமாக ஆராய்ச்சிகள் மூலம் அறியப்பெறவில்லை.

கருச் சிதைவில்ை ஏற்படும் விளைவுகள் மிகவும் கொடு மையானவை; பெருந் தீங்கு பயப்பவை. தாயின் உயி ருக்கே உலைவைக்கக் கூடியவை. அமெரிக்காவில் மட்டிலும்

77: 65góg to Gl--Curette 783 (5 golstii (31-3-Curettage

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/350&oldid=1285248" இலிருந்து மீள்விக்கப்பட்டது