பக்கம்:இல்லற நெறி.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணக் கலை $89

ஒருடம்பால் அநுபவிப்பதில் அமைதிகொண்டு விருப்பம் நிறைவுருமல் இரண்டு உடம்புகளால் அநுபவிப்பதை ஒக்கும் என்கின்ருர் கவிஞர். அன்றியும், தில்லையில் எழுந் தருளியிருக்கும் ஒலிக்கும் கழலையுடைய அம்பலத்தானது அருளைப்பெற்றவர் அடையும் உலப்பிலா இன்பம்போல, அவர்கள் ஆழ்ந்துள்ள இன் வெள்ளமும் ஒரு காலத்திலும் குறையாது என்றும் கூறுகின்ருர். இங்ங்ணம் அருட் செல்வர் களையும் ஈர்க்கவல்ல புணர்ச்சியின் உச்சநிலையைச் சிறிது விளக்குவேன்.

உச்ச நிலை உணர்ச்சி: காதல் உணர்ச்சியை விளைவிக்கும் தூண்டல் கிட்டத்தட்ட உடலின் எல்லாப் பகுதிகளிலும் தொடர்ந்தாற்போல் பல்வேறு மாற்றங்களை விளைவிக்கின் றது. ஒர் ஆடவனே அல்லது மகளோ காதல் உணர்ச்சி யால் கிளர்த்தெழுங்கால், இதயம் வேகமாகத் துடிக் கின்றது. குருதியமுக்கம் அதிகரிக்கின்றது; உடலின் பல் வேறு உறுப்புகளில் - சிறப்பாகப் பிறப்புறுப்புகளில் அஃதாவது ஆணுறுப்பு, யோனிலிங்கம், சிறிய உதடுகள், யோனிக்குழலின் சுவர்கள், மூலைக்கண்கள் ஆகிய பகுதி களில்-குருதியோட்டம் அதிகமாக நிகழ்கின்றது. அதே சமயத்தில் உடல் முழுவதையும் பாதிக்கும் நரம்பு அழுத்த மும் நேரிடுகின்றது. காதல் தூண்டலால் ஏற்படும் புணர்ச்சி தொடர்ந்து நடை பெறுங்கால் உணர்ச்சி உச்ச நிலையை அடையும்வரை இந்த மாற்றங்கள் அதிகரித்துக்கொன்டே வருகின்றன; ஒரு சமயத்தில் அவை திடீரென்று விடுபடு சின்றன. இவ்வாறு விடுபடும் தருணமே உச்சநிலை உணர்ச்சி” என்று வழங்கப் பெறுகின்றது. இப்பொழுது படிப்படியாகப் புற உலக நினைவே இல்லாது மறையத் தொடங்குகின்றது. தீவிரமான கிளர்ச்சியின் காரணமாக மூளையின் செயலே நீங்கிவிடுகின்றது. இந்த உச்சநிலை உணர்ச் சியின் பொழுது பிறப்புறுப்புகளைச் சுற்றிலுமுள்ள தசைகள் திடீரென்று சுருங்குவதால்தான் இது நேரிடுகின்றது.

70. probli ogp35th–Nervous tension.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/395&oldid=598412" இலிருந்து மீள்விக்கப்பட்டது