பக்கம்:இல்லற நெறி.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416

இல்லற நெறி


கால் மனைவி தொடைகளையும் கால்களையும் நீட்டிப் படுத்துக் கொள்வதும் விறைத்த நிலையில் இருப்பதும் தெரிந்தது. இந்நிலையில் ஆண் குறியை யோனிக்குழலில் செலுத்தவே முடியாது: கால்களைச் சற்று மடித்துத் தொடைகளைச் சற்று அகட்டி வைக்கவேண்டுமென்பதைப்பற்றி அவள் சிறிது அறியாதவள். சங்கடங்களின் காரணங்களையும், புணரும் உடற்கூறினையும், யுக்தி முறையினையும் பற்றிச் சிறிது விளக் கியவுடன், அவர்களிடையே இருந்த சங்கடங்கள்: மறைந் தன; தாம்பத்திய உறவும் தடையின்றி நடைபெற்றது. இந்த எடுத்துக்காட்டில் கணவனும் பாலுறவினைச் சிறிதும் அறியாதவன். ஒருக்கால் அவனுக்கு இஃது ஏற்பட்டிருந்த போதிலும், அவனுக்குத் தேவையான அளவு பாலுறவுபற் றிய அறிவு ஏற்பட்டிருக்கும் என்று சொல்வதற்கில்லை. திருமணத்திற்கு முன்னர் ஏற்படும் இத்தகைய அநுபவங் களில் பெண்களே புணர்ச்சி ஏற்பாடுகளை மேற்கொண்டு ஆணுக்கு வழிகாட்டுவர். திருமணம் ஆனதும் ஆனே புணர்ச்சிக்கு வழிகாட்டித் தொடங்கவேண்டியுள்ளது; அப்பொழுது அவன் வழி தெரியாமல் தடுமாறுவது இயல்பு.

பிறப்புறுப்பு வலிப்பு: கலவியற்றிய அறியாமை அல்லது காதற்கலையில் போதுமான திறனின்மைதான் தொடக்கத் தில் ஏற்படும் சங்கடங்களுக்குக் காரணம் என்று சொல்லவும் முடியாது. சில சமயங்களில் பெண்ணின் எதிர்வினைகளும் மனப்பான்மைகளும் கலவி நடைபெற முடியாத நிலையினை உண்டாக்கிவிடுகின்றன. பெரும்பாலான பெண்கள் முதன் முதலாகக் கலவியில் ஈடுபடுங்கால் பாலுறவினைத் தடுத்துநிற் கும் குணத்தினையுடையவர்கள். சாதாரணமாக இத்தடை விரைவில் மறைந்து நல்ல இணைவிழைச்சு நிலைநிறுத்தப்பெறு கின்றது. எனினும், இத்தடை சிலரிடம் பல வாரங்கள், மாதங்கள் வரை-ஏன்? சில ஆண்டுகள் வரைகூட-நீடிக்கின் றது; இது திருப்தியான,பால்பொருத்தப்பாடு அமைவதற்கு முக்கிய முட்டுக்கட்ட்ையாக உள்ளது. ஒன்றரையாண்டு கட்கு முன்னர் மணமான தம்பதிகள் சரியான முறையில் கலவிபுரிய முடியாதநிலையிலிருந்தனர்; மனைவியிடம் கிழியாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/422&oldid=1285280" இலிருந்து மீள்விக்கப்பட்டது