பக்கம்:இல்லற நெறி.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் பொருத்தக் கேடுகள் 451

உடலையே சோர்வுறச் செய்வதலுைம் அது நேரிடலாம். தவிரவும் விறைத்தலுக்குப் பாலுந்தல் மட்டிலும்போதாது. தனியாள் தகுந்த மனப்பான்மையுடனும் இருத்தல் மிகவும் இன்றியமையாதது; அஃதாவது, அவர் காமத்துடிப்புடன் இருத்தல் வேண்டும். சாதாரணமாகப் பாலுணர்ச்சியுள்ள தனியாளிடம் அவர் ஒரு கணிதப் பிரச்சினைக்குத் தீர்வு காண் பதில் ஈடுபட்டிருக்குங்கால் விறைத்தல் நிகழாது என்பது வெளிப்படை.

சாதாரணமாகத் தழுவல், முத்தமிடல், அனைதல் போன்ற தொடுபுலத் துடிப்புகளாலும், காமத்துடிப்பினை விளைவிக்கும் பொருளையோ அல்லது காமத்திற்குக் காரண மான உடற்பகுதியினையோ காண்பதாலும், பெண்ணின் பேச்சினைக் கேட்பதாலும், அல்லது பெண் அணியும் மன முள்ள பொருள்களின் மணத்தை முகர்வதஞலும் காமக் கிளர்ச்சி நிகழ்கின்றது. இக்கிளர்ச்சி முன் நிகழ்ச்சியின் நினைவுகளையும் புணர்ச்சியின் எண்ணங்களையும் நினைவு கூர்வ தாலும் அல்லது கற்பனையில் காண்பதாலும் எழலாம். காமத்தை உண்டுபண்ணும் இலக்கியத்தைப் படிப்பதாலும் இஃது எழலாம். ஆயினும் மனத்தொல்லே, அருவருப் புணர்ச்சி அச்சம் போன்ற கூறுகள் காமக் கிளர்ச்சியைச் சிதைத்துவிடும்.

மனத்தில் எழும் காமக் கிளர்ச்சி மூளையிலிருந்து ஒரு குறிப்பிட்ட நரம்புகளின் வழியாக நடுநரம்பின் கீழ்ப் பகுதிக்கு அனுப்பப் பெறுகின்றது. இப்பகுதியில்தான் விறைத்தல் மையம்' அமைந்துள்ளது. இந்த இடத்தி விருந்து ஆண் குறிக்குச் செல்லும் நரம்புகள் இத்துடிப்பினை ஆண் குறிக்குக் கொண்டு செல்லுகின்றன. இதல்ை ஆண் குறியிலுள்ள பை போன்ற அறைகளில் குருதி நிரம்புகின் றது. ஒருவித தசைச் செயலால் இக்குருதி திரும்பிப் பாயாமல் அங்கேயே தங்குகின்றது. பை போன்ற அறைகள் மேலும் மேலும் குருதியை உறிஞ்சி ஆண் குறியின் பருமன

56. also sp;5&6 Goldulb-Erection-centre

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/457&oldid=598551" இலிருந்து மீள்விக்கப்பட்டது