களவியற் காரிகை
109
யிரவே யாயி னல்லை பகலே
மெல்லியற் கொடிச்சி நுதலினும்
புல்லென் றனையால் நோகோ யானே
பொருளியல் 60.
43. வருந்துதல் கிளத்தல் என்பது நீர்வரையா தொழியின் எம்பெருமாட்டி வருந்துவள்; வரைவுணர்த்து மிடத்து நீர் வருந்துதிர்; ஆதலால், இரண்டானும் எனக்கே மிக வருத்தமுடைத் தெனத் தோழி சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு: (342) “மன்னுந் திருவருந் தும்வரை யாவிடி னீர்வரைவென்
றுன்னு மதற்குத் தளர்ந்தொளி வாடுதி ரும்பரெல்லாம் பன்னும் புகழ்ப்பர மன்பரஞ் சோதிசிற் றம்பலத்தான் பொன்னங் கழல்வழுத் தார்புல னென்னப் புலம்புவனே’
- திருக்கோவையார் 131.
(343) “வரையா விடின்மதி வாணுதல் வாடும் வரைவுரைத்தால் விரையா டியகண்ணி வேந்தநீ வாடுதி விண்டெதிர்ந்த நிரைதா ரரைசரை நெல்வேலி வென்ற நெடுந்தகைசீர் உரையா தவரென யானே புலம்புத லுற்றனனே
44.
இன்றறிந்தேன்
99
பாண்டிக்கோவை 77.
என்பது இதற்குமுன் னல்லது
கடவுளாக வல்லது நினையேன் எனச் சொல்லுதல். இவளை மக்களுள் ஒருமகள் என்பது இன்றறிந்தேன் எனச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு :
(344) “மாடஞ்செய் பொன்னக 'ருந்நிக
ரில்லையிம் மாதர்க்கென்னப்
பீடஞ்செய் தாமரை யோன்பெற்ற பிள்ளையை யுள்ளலரைக் கீடஞ்செய் தென்பிறப் புக்கெடத் தில்லைநின் றோன்கயிலைக்
கூடஞ்செய் சாரற் கொடிச்சியென் றோநின்று கூறுவதே”
I
- திருக்கோவையார் 129.
1. பொன்னக ரில்லையிம் மாதருக் கென்ன மன்னும்.