118
இளங்குமரனார் தமிழ்வளம்
கேட்டவை தோட்டி யாக மீட்டாங் கறனும் பொருளும் வழாஅமை நாடித் தற்றக வுடைமை நோக்கி மற்றதன் பின்னா கும்மே முன்னியது முடித்தல் அனைய பெரியோர் ஒழுக்கம் அதனால் அரிய பெரியோர்த் 'தேருங் காலை நும்மோர் அன்னோர் மாட்டும் இன்ன பொய்யோடு மிடைந்தவை தோன்றின் மெய்யாண் டுளதோஇவ் வுலகத் தானே"
―
―
11
நெடுந்தொகை 286.
53. புனங்கண் டழிதல் என்பது தலைமகனும் தோழியும் புனங்காவலேறிப் போகா நிற்பத் தலைமகன் புனங்கண்டு வருந்துதல். அதற்குச் செய்யுள் வருமாறு :
(375) “பொதுவினிற் றீர்த்தென்னை யாண்டோன்
புலியூ ரரன்பொருப்பே
இதுவெனி லென்னின் றிருக்கின்ற
வாறெம் மிரும்பொழிலே
எதுநமக் கெய்திய தென்னுற்
றனிரறை யீண்டருவி
மதுவினிற் கைப்புவைத் தாலொத்த
வாமற்றிவ் வான்புனமே
(376) "கள்ளாவி நாறுங் கமழ்கூந்தற் காரிகையென்
உள்ளாவி சென்ற வுழியறியேன்-தள்ளாத
மல்லல் அருவி மலைநாடி வாய்திறந்து சொல்லல் புரியாய் துணிந்து”
2பகற்குறி முற்றும்
- திருக்கோவையார் 146.
- (?)
1. தெரியுங். 2. மு. ப: அகத்திணைப் பகற்குறி முற்றும்.