களவியற் காரிகை
(391) “விளைக்கின்ற பல்புகழ் வேந்தன் விசாரிதன் விண்டெதிர்ந்து
திளைக்கின்ற மன்னரைச் சேவூ
ரழித்தவன் றீந்தமிழ்போல்
வளைக்கொன்று கைம்மங்கை யாய்சென்று
காண்டுநின் 'வாயுவந்து
முளைக்கின்ற வெள்ளேயிற் றேர்கொண் டலர்ந்தன முல்லைகளே
2.
(392) “கள்ளவிழ் கோதைநின் கண்போற் குவளையு முள்ளெயிற் றரும்பு முல்லையுங்
கொள்குவம் போதுநங் குளிர்பொழி லிடத்தே
123
―
பாண்டிக்கோவை. 188.
-பொருளியல் 74.
58. நீங்குதல் உரைத்தல் என்பது குறியிடத் துய்த்த தலைமகளைத் தலைமகன் எதிர்ப்படு மென்னும் நிலைமைக்கண் தான் நீங்குதல். அதற்குச் செய்யுள் வருமாறு :
(393) “நந்தீ வரமென்னும் நாரண
னாண்மலர்க் 3கண்ணுக்கெஃகந்
தந்தீ வரன்புலி யூரனை
யாய்தடங் கண்கடந்த
இந்தீ வரமிவை காணின்
னிருள்சேர் குழற்கெழில்சேர்
சந்தீ வரமுறி யும்வெறி வீயுந் தருகுவனே'
(394) “ஆய்போ லருளுங் கொடையரி
கேசரி யம்பொதியில்
வேய்போ லியவிரு தோண்மட வாய்விரைத் தேன்கமழ்நின் வாய்போன் மலருங் குமுதங்கள் கொய்து வருமளவும் நீபோ திவைகொய்து நிற்பது சால நெறியுடைத்தே’
- திருக்கோவையார் 163.
பாண்டிக்கோவை. 142.
1. வாயுள்வந்து
2. டரும்பின.
3. கண்ணிற் கெஃகந்.