174
இளங்குமரனார் தமிழ்வளம்
ருஉ. நற்றா யிரங்கனற் செஞ்சுடர்
தன்னைப் பாவனண்ணிப்
பெற்றாள் கருமா மகளுக்
குரைத்தல்பின் சேறல்சுரத்
துற்றா ளிரங்கல் புறவோ
டுரைத்த லடிச்சுவட்டைச்
சுற்றா லுரைத்தல் சுரத்து வினாதல் துடியிடையே.
ருங். துடியா ரிடையாட்கை யங்கிளத்
தல்சேர் விடஞ்சொல்லுதல் தொடியார் செவிலியை யாற்றல்
துடரகந் தான்றணித்தல்
வடியார் வரவது முந்துறுப்
பேய்ந்த கிளைமகிழ்ச்சி
யடியான வேலன் றனைவினா
வீன்றாட் புகழ்வதுவே.
ருச. வேட்டான் மணங்கண் டுரைத்தலக் கற்பு நிலைவிளம்பல்
வாட்டாழ் விழிதன் மகணிலை கூறல் எனவகுத்த பாட்டார் கிளவி இருபத்
துடனே ழெனத்தெளிந்தோர்
தேட்டார் உடனிலை என்னத்
திறத்தோ டுரைத்தனரே.
―
11
இச்சூத்திரங்கள் என்னுதலிற்றோவெனின் உடனிலைச் செலவு இத்துணைக் கிளவியாம் என்ப தறிவித்தலைக் கருதிற்று.
என்னை?
(1) கையடையும், (2) சுரத்துய்த்தலும், (3) விருந்து விலக்கலும், (4) பதியள வுரைத்தலும், (5) தோழியை வினாதலும், (6) செவிலி யிரங்கலும், (7) மென்மை கூறலும், (8) நற்றாய்க் குரைத்தலும், (9) நற்றாயிரங்கலும், (10) செஞ்சுடர்ப் பரவலும், (11) கருமகட் குரைத்தலும், (12) பின்செல வலித்தலும், (13) சுரத் திரங்கலும், (14) புறவொடுரைத்தலும், (15) அடிச் சுவடுரைத் தலும், (16) சுரத்திறம் வினாதலும், (17) ஐயமுரைத்தலும், (18) சேர்விட முரைத்தலும், (19) செவிலியை யாற்றலும், (20) துடரகந்