களவியற் காரிகை
53
15. ஆற்றான் கிளத்தல் என்பது இவ்வகை சொல்லக் கேட்டு நாணினாற் கண் புதைத்தாளுக்குத் தலைமகன் கூறுதல். அதற்குச் செய்யுள் வருமாறு :
(135) “தாழச்செய் தார்முடி தன்னடிக்
கீழ்வைத் தவரைவிண்ணோர்
சூழச்செய் தானம் பலங்கை
தொழாரினுள் எந்துளங்கப் போழச்செய் யாமல்வை வேற்கண் புதைத்தபொன் னேயென்னைநீ வாழச்செய் தாய்சுற்று முற்றும் புதைநின்னை வாணுதலே”
(136) “செய்தவம் பேசுதற் சீர்வல்ல கொல்லத் திருவரங்கன் கைதவம் பேசெய்யக் காய்ந்த பிரான்கதி ரோன்மகனை
வைதவம் பேசிய வாலியு
மாம்' (ரமுமுருவ)
எய்தவம் பேயன்ன கண்மட
வீர்புதைத் தென்பயனே’
(137) “அரும்புடைத் தொங்கற்செங் கோலரி
கேசரி கூடலன்ன
சுரும்புடைக் கோதைநல் 2லாயெமக்
குத்துயர் செய்யுமென்றுன் பெரும்படைக் கண்புதைத் தாய்புதைத் தாய்க்குநின் பேரொளிசேர்
கரும்புடைத் தோளுமன் றோவெனை யுள்ளங் கலக்கியதே.
(138) “நாட்டம் புதைக்கின்ற தென்னீ
மடந்தை நவகண்டமே
- திருக்கோவையார் 43.
கோயிலந்தாதி.
பாண்டிக்கோவை 53.
1. மு. ப: மாமாமுரு. 2. லாயிவற்.