56
இளங்குமரனார் தமிழ்வளம் - 11
17. புணர்ச்சி மகிழ்தல் என்பது தலைவியை மெய் தொட்டுப் பயின்ற தலைவன் அவ்வின்பஞ் சொல்லி மகிழ்தல். அதற்குச் செய்யுள் வருமாறு:
(146) “நீங்கரும் பொற்கழற் சிற்றம் பலவர் நெடுவிசும்பும்
வாங்கிருந் தெண்கடல் வையமு மெய்தினும் யான்மறவேன் தீங்கரும் பும்மமிழ் துஞ்செழுந்
தேனும் பொதிந்துசெப்புங் கோங்கரும் புந்தொலைத் தென்னையு
மாட்கொண்ட கொங்கைகளே
(147) “கையேர் சிலைமன்ன ரோடக் கடையற்றன் கண்சிவந்த நெய்யே ரயில்கொண்ட நேரியன் கொல்லி நெடும்பொழில்வாய் மையேர் தடங்கண் மடந்தைமெல் லாகம் புணர்ந்ததெல்லாம் பொய்யே யினிமெய்ம்மை யாயினு மில்லை புணர்திறமே”
(148) “ஒடுங்கீரோதி ஒண்ணுதற் குறுமகள் நறுந்தண் நீரள் ஆரணங் கினளே
இனையள் என்றவட் புனையளவறியேன் சிலமெல் லியவே கிளவி
அணைமெல் லியல்யான் முயங்குங் காலே”
- திருக்கோவையார் 46.
பாண்டிக்கோவை 20.
குறுந்தொகை 70.
18. இருத்தல் என்பது புணர்ந்து நீங்கிய தலைவன் தலைவியை ஆய்த்துய்த்துப் பிரிவாற்றாது வருந்தியிருத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு :
(149) “பொய்யுடை யார்க்கரன் போலக
லும்மகன் றாற்புணரின்
மெய்யுடை யார்க்கவன் அம்பலம்
போல மிகநணுகும்