களவியற் காரிகை
வேய்பயில் இறும்பின் ஆமறல் பருகும் பெருங்கல் வேலிச் சிறுகுடி யாதெனச் சொல்லவுஞ் சொல்லீ ராயிற் கல்லெனக் கருவி மாமழை வீழ்ந்தென எழுந்த
எ
செங்கேழ் ஆடிய செழுங்குரற் சிறுதினைக் கொய்புனங் காவலு நுமதோ கோடேந் தல்குல் நீடோ ளீரே”
(163) “செய்யவாய் நுண்மருங்குற் சிற்றிடைப் பேரமைத்தோட் பையர வல்குற் பணைத்தேந்தும்-வெய்யமுலைக் காரே துவர்வாய்க் கருங்கூந்தற் காரிகையீர் ஊரேது சொல்லீர் உமக்கு
61
– நற்றிணை 213.
- கிளவித் தெளிவு.
2. வேழம் வினாதல் என்பது தலைமகளுந் தோழியும் ஓரிடத்திருப்பச் சென்று தன்குறை யறிவிப்பான் சில வேழம் போந்தனவுளவோ என்று சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு :
(164) "இருங்களி யாயின் றியானிறு
மாப்பவின் பம்பணிவோர்
மருங்களி யாவன லாடவல்
லோன்றில்லை யான்மலையீங்
கொருங்களி யார்ப்ப வுமிழ்மும் மதத்திரு கோட்டொருநீள் கருங்களி யார்மத யானையுண் டோவரக் கண்டதுவே”
(165) "வருமால் புயல்வண்கை மான்றோர்
வரோதயன் மண்ணளந்த
'திருமால் வளவஞ்சி யன்னவஞ்
சீறடிச் சேயிழையீர்
கருமால் வரையன்ன தோற்றக்
கருங்கைவெண் 2கோட்டுப்பைங்கட்
திருக்கோவையார் 52.
1.
திருமா லவன்வஞ்சி. 2. கோட்டசெங்கட், பெருமால்.