78
இளங்குமரனார் தமிழ்வளம்
(218) “மின்னை மறைத்தசெவ் வேல்வலத்
தால்விழி ஞத்துளொன்னார்
மன்னை மறைத்தவெங் கோன்வையஞ் சூழ்பௌவ நீர்ப்புலவந்
தன்னை மறைத்திள ஞாழல்
கமழுந்தண் பூந்துறைவா வென்னை மறைத்த விடத்திய
லாதுகொ லெண்ணியதே'
(219) “கடிகமழ் கண்ணி நெடுவரை யாயத்து
1
'வடிவே லண்ணல்நீ மறைப்பின்
முடியா தாகு முன்னிய வினையே’
―
11
பாண்டிக்கோவை 119.
பொருளியல் 31.
12. கூறென விடுத்தல் என்பது தோழி தலைமகனை நின் குறை நீயே சென்றுரை எனச் சொல்லியது. அதற்குச் செய்யுள் :
(220) “அந்தியின் வாயெழி லம்பலத்
தெம்பர னம்பொன்வெற்பிற்
பந்தியின் வாய்ப்பல வின்சுளை
பைந்தே னொடுங்கடுவன்
மந்தியின் வாய்க்கொடுத் தோம்புஞ்
சிலம்ப மனங்கனிய
முந்தியின் வாய்மொழி நீயே
2மொழிசென்றெம் மொய்குழற்கே”
(221) “சேயே எனநின்ற தென்னவன் செந்நிலத் தேற்றதெவ்வர்
போயே விசும்பு புகச்செற்ற கோனந்தண் பூம்பொதியில்
வேயே யனையமென் றோளிக்கு நின்கண் மெலிவுறுநோய்
- திருக்கோவையார் 99.
1.
மு. ப: வடிவே லண்ணல் என்னை மறைப்பின்
முடியா தாகுநீ முன்னிய வினையே.
2. மொழி சென்றம்.