களவியற் காரிகை
81
உட்புலம் போடுசெல் லச்செற்ற
வேந்தன் உறந்தையன்னாள் கட்புல 'மாச்செலுந் தெய்வங்கண் டாய்கமழ் பூஞ்சிலம்பா வட்கில னாகியெவ் வாறு
மொழிவனிம் மாற்றங்களே”
(231) "நெருநலு முன்னாள் எல்லையு மொருசிறைப் புதுமை யாதலிற் கிளத்தல் நாணி
நேரிறை வளைத்தோளுன் தோழி செய்த
ஆருயிர் வருத்தம் களையா யோவென எற்குறை யுறுதி ராயிற் சொற்குறை
யெம்பதத் தெளியளோ மடந்தை
யின்ப வாழ்க்கையள் இவள்மன் எமக்கே
―
பாண்டிக்கோவை 130.
—
பொருளியல். (?)
16. குலமுறை கிளத்தல் என்பது தலைமகனை நீர் உயர்ந்த குலத்துள்ளீர்; நும் குலத்துக்கு ஆகோம் எனத் தோழி சொல்லுதல்.
அதற்குச் செய்யுள் வருமாறு :
(232) “தெங்கம் பழங்கமு கின்குலை
சாடிக் கதலிசெற்றுக்
கொங்கம் பழனத் தொளிர்குளிர் நாட்டினை நீயுமைகூர்
பங்கம் பலவன் பரங்குன்றிற்
குன்றன்ன மாபதைப்பச்
சிங்கந் திரிதரு சீறூர்ச்
சிறுமியென் றேமொழியே'
(233) “நடைமன்னு மென்றெமை நீர்வந்து
3நண்ணல்நன் னீர்வளநாட்
டிடைமன்னு செல்வர் நுமரெமர் பாழி 'யிகல்விளைத்த படைமன்னன் தொல்குலமாமதி
போற்பனி முத்திலங்கி
- திருக்கோவையார் 100.
1.. இச்செய்யுள் பொருளியற் பதிப்பில் இடம் பெற்றிலது. 2. யெந்தேமொழியே. 3.
நண்ணன்மின். 4. யிகலழித்த.