தகடூர் யாத்திரை மூலமும் உரையும்
“பல்சான் றீரே பல்சான் றீரே
செல்கெனச் சொல்லாது ஒழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே”
என்றும்,
“பல்சான் றீரே பல்சான் றீரே
குமரி மகளிர் கூந்தல் புரைய
அமரின் இட்ட அருமுள் வேலிக்
133
(246)
கல்லென் பாசறைப் பல்சான் றீரே”
(301)
என்றும் புறப்பாடல்களில் இவ்வமைதி போற்றப்பட்டிருத்தல் காண்க. இத் தகடூர் யாத்திரையுள்,
“அஞ்சுதக் கனளே அஞ்சுதக் கனளே" (33)
66
‘எற்கண் டறிகோ எற்கண் டறிகோ” (42)
என்று
“கலிமா னோயே கலிமா னோயே” (18)
66
66
'வாதுவல் வயிறே வாதுவல் வயிறே" (41)
வருக வருக தாங்கன்மின் தாங்கன்மின்” (37)
-
இவ்வியாப்புறவினும், வேறுபட்டும்
அடுக்கி
வந்தமையை அறிந்து கொள்க.
14. எயில் காத்தல் - 2
நேரிசை ஆசிரியப்பா
27. இவனே, பொறிவரி அன்ன பொங்குளை வயமான் மேலோன்; யாரென வினவின் தோலா
உரனுடை யுள்ளத்(து) ஒன்னார் உட்கும் சுரையமை நெடுவேற் சுடர்ப்பூ ணோனே;
அவனே யெம்மிறை; ஈதவன் மாவே; கறுவுகொள் நெஞ்சம் கதுவவந் தனனே
யாவரும், குறுகல் ஓம்புமின் குறைநாள் மறவீர்! நெருநல் எல்லி நிரைவரு கடுந்திறற்
பருமத யானை பதைக்க நூறி
அடுகளத் தொழிந்தோன் தம்பி; தொடுகழல்
நொச்சித் தெரியல் நெடுந்தகை
அச்சம் அறியான் ஆரணங் கினனே.
புறத். 1343