உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

21

முயன்றார் ; அம் முயற்சிப் பயனை என் சரித்திரத்தில் எழுதுகின்றார்:

(திருநெல்வேலித்) "தெற்குப் புதுத் தெருவில் இருந்த கிருஷ்ண வாத்தியார் என்பவர் வீட்டிற்குப் போனோம். அங்கே தொல்காப்பிய உரைச் சுவடி ஒன்றில், ‘நான்குனேரியில் இருக்கும் ஒருவருக்கு என்னிடமிருந்த தகடூர் யாத்திரைப் பிரதி ஒன்றைக் கொடுத்து விட்டு இப் பிரதியை இரவலாக வாங்கிக் கொண்டேன்' என்று எழுதியிருந்தது. யாரிடமிருந்து வாங்கியது என்று குறிப்பிடவில்லை. தொல்காப்பிய உரையில் தகடூர் யாத்திரை என்ற பெயர் வருகின்றது. ஆதலால் அது பழைய நூலென்று உணர்ந்திருந்தேன். அது நான்குனேரியிலே உள்ள தென்ற செய்தியைக் கண்டதும் அதனை எப்படியாவது கண்டு பிடிக்கலாம் என்று எண்ணி, 'நான்குனேரியில் கவிராயர்கள் வீடுகள் இருக்கின்றனவா?' என்று உடனிருந்த அன்பர்களைக் கேட்டேன்.

'இருக்கின்றன; வைணவர்களே அதிகமாகையால் வைணவ நூல்கள் கிடைக்கும்' என்று அவர்கள் சொன்னார்கள், 'இந்தப் பிரதியில் தகடூர் யாத்திரைச் சுவடியை அவ்வூரிலுள்ள ஒருவரிடம் கொடுத்திருப்பதாக எழுதியிருக்கிறது. அங்கே சென்று தேடிப் பார்த்தால் கிடைக்குமோ? என்று வினவினேன்.

‘கிடைக்கலாம். ஆனால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. இந்த மாதிரியான புத்தகங்களை இப்போது யார் படிக்கிறார்கள்? நீங்கள் தேடும் பத்துப்பாட்டே முழுவதும் கிடைக்கவில்லையே. இதுபோல அந்த நூலும் கிடைக்காமல் போனாலும் போகலாம். இந்தத் தொல்காப்பிய பிரதி இங்கே இருப்பதுபோல் இதற்குப் பரிவர்த்தனையாக அனுப்பிய தகடூர் யாத்திரை அங்கே இருக்கவும் நியாயம் உண்டு.

‘கிடைத்தால் நல்லது' என்றேன் நான். ஆனால், பிற்காலத்தில் நான்குனேரியில் நான்குமுறை ஏடு தேடிய போதும் தகடூர் யாத்திரை கிடைக்கவே யில்லை. பழைய நூல்கள் பல இந்த உலகத்தை விட்டு யாத்திரை செய்து விட்டதைப் போல அந்த அருமையான நூலும் போய்விட்டதென்றுதான் நினைக்கிறேன்” (பக். 876-77.)

பாடிய புலவர்கள்

தகடூர் யாத்திரை தொடர்நிலைச் செய்யுளாகும். பெருஞ் சேரல் இரும்பொறை தகடூர் மேற் செலவுகொள்ள நேர்ந்த