66
யாப்பருங்கலம்
'அசையே இரண்டும் மூன்றும் தம்முள் இசைய வருவன சீரெனப் படுமே; ஈரிரண் டாகியும் ஒரோவிடத் தியலும்
என்றார் பல்காயனார்.
66
“நாலசை யானும் நடைபெறும்; ஓரசை சீர்நிலை எய்தலும் சிலவிடத் துளவே' என்றார் காக்கைபாடினியார்,
"நாலசைச் சீரும் ஒரோவிடத் தியலும் பாவோடு பாவினம் 'பயிறல் இன்றி”
என்றார் அவிநயனார்.
ஓரசைச்சீரின் பெயரும் வகையும்
கச . ஓரசைச் சீருமஃதோரிரு வகைத்தே.
91
‘என்பது என் நுதலிற்றோ?' எனின், ‘ஓரசையினால் ஆகிய சீரும் பொதுச்சீர்’ ஆகும் என்று எய்துவித்தலும், அதனின் எண் உணர்த்துதலும் நுதலிற்று.
2
-
(இ-ள்.) ஓர் அசைச்சீரும் அஃது ஓர் அசையினான் ஆகிய சீரும் ‘அஃது' என்று மாட்டெறிந்தமையின் பொதுச் சீராம்; ஓர் இரு வகைத்தே - அது நேரசைச்சீரும் நிரையசைச் சீரும் என இரண்டு வகைப்படும் என்றவாறு.
(உ.ம்) நாள், மலர் என்பன.
இவை ஓரசைச்சீருக்கு உதாரணம் உரைத்தது, வெண்பாவின் இறுதி ஓசை ஊட்டுதற்பொருட்டு.
66
அவற்றிற்குச் செய்யுள் :
"பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயி றூறிய நீர்"
எனவும்,
“நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவலம் இலர்
- திருக்குறள். 1121.
―
திருக்குறள். 1072.
எனவும் இவற்றுள் நேரசையும் நிரையசையும் வந்தவாறு காண்க. என்னை?
1. கண்ணுற நிற்றல் இல்லாமல். 2. ஒரு நூற்பாவிற் கூறிய விதியை அதனை ஒத்த நூற்பாவிற்கும் இணைத்துக்கொள்ளும் ஓர் உத்தி (நன். 14).