யாப்பருங்கலம்
“காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள்
―
―
101
கலித்தொகை. 39.
шí. Å. 86. CLDÝ.
எனவும் கொச்சகக் கலியுள்ளும் நேரீற்று இயற்சீர் வந்தது.
“உடைமணியரை யுருவக் 'குப்பாயத்து”
என வஞ்சியடி நடு நேரீற்று இயற்சீர் வந்தது.
266
அள்ளற்பள்ளத் தகன்சோ ணாட்டு
வேங்கைவாயில் வியன்குன் றூரன்”
யா. கா. 9. மேற்.
என்னும் முச்சீரடி வஞ்சியுள் நேரீற்று இயற்சீர் சிறு பான்மை வந்தது.
“மண்டிணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
3
விசும்பு தைவரு வளியும்
வளித்தலைஇய தீயும்
தீமுரணிய நீரும்'
6
எனவும்,
“பொன்புனைந்த நகரும்
நகர்சூழ்ந்த எயிலும்
புறநானூறு.2.
எயிலேந்திய 'கண்ணும்
கண்ணேந்திய குணனும்’’
எனவும் இவ் வஞ்சியடி இறுதி நேரீற்று இயற்சீர் சிறு பான்மை வந்தது.
இனிப் பாவினத்துள் விரவி வருமாறு:
“போதார் °நறும்பிண்டிப் பொன்னார் மணியணையான்
தாதார் மலரடியைத் 'தணவாது வணங்குவார் தீதார் வினைக் கெடுப்பார் சிறந்து”
- யா. வி. 66. மேற்.
வ் வெள்ளொத்தாழிசையுள் இயற்சீரும் உரிச்சீரும் வந்தன.
- “நன்பி தென்று தீய சொல்லார்
முன்பு நின்று *முனிவ செய்யார்
அன்பு வேண்டு பவர்’
வெள்ளொத் தாழிசை இயற்சீரானே வந்தது.
யா. கா. 27
1. சட்டை. 2. சேறு. 3.தடவும். 4. மதில். 5. கண்ணேணி. 6. நறிய அசோகு. 7. அகலாது. (பா. வே) *நண்பி. *முனிவு.