106
வரலாறு :
இளங்குமரனார் தமிழ் வளம் – 13
“திரைந்து திரைந்து திரைவரத் திரண்முத்தம் கரைவாங்கி”
- யா. வி. 15.94. மேற்.
என்னும் கொச்சகக் கலியுள் “சிறுநுளைச்சியர்' என நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர் வந்தது.
"கலியினோ டகவல்' எனப் பொது வகையாற் கூறிற் றேனும், கலிப்பாவினுள்ளும் ஆசிரியப்பாவினுள்ளுமே விதி முகத்தால் விலக்குவது. அவற்றின் இனத்துள் நிரை நடுவா யினவும் புகுதும் எனக் கொள்க. ‘அஃது எற்றாற் பெறுதும்?' எனின், ‘மூவசைச் சீருரிச்சீர்' (யா. வி 1.1) என்னும் சூத்திரத்துப் ‘பா' என்னும் தவளைப்பாய்த்துளாக அதிகாரம் வருதலானும், 'உரையிற்கோடல்' என்பதனாலும்,
66
ஆசிரி யத்தோடு வெள்ளையும் கலியும் நேரடி தன்னால் நிலைபெற நிற்கும்
—
யா. வி. 27. மேற்.
என்று பொது வகையாற் சொல்லிப் பாவே கொண்டார் பல்காயனார் ஆகலானும்,
(நேரிசை வெண்பா)
“பொதுவகையாற் சொற்றனவும் பொய்தீர் சிறப்பிற் குதவி ஒரோவிடத்து நிற்கும் - விதிவகையால் நின்ற பொருளை நிகழ்விப் பதுநியமம் என்றுரைப்பர் தொல்லோர் எடுத்து
என்பதனாலும் பெறுதும்.
266
வரலாறு :
யா. வி. 30. மேற். (நற்றத்தனார்)
(சந்தக் கலி விருத்தம்)
'வளர்கொடியன மணம்விரிவன மல்லிகையொடு மௌவல் ; நளிர்கொடியன நறுவிரையக நறுமலரன நறவம்;
குளிர்கொடியன 3குழைமாதவி; குவிமுகையன கொகுடி; ஒளிர்கொடியன உயர்திரளினொ டொழுகிணரன ஓடை
―
99
சூளாமணி. தூது. 4.
இக்கலி விருத்தத்துள் நிரையும் நேரும் நடுவாகிய
வஞ்சியுரிச்சீர் வந்தன.
“கொன்றார்ந் தமைந்த குருமுகத் தெழில்நிறக் குருதிக் கோட்டன இருந்தாட் பெருங்கைக்
1. சிறு - நுளைச்
―
சியர் = கருவிளங்கனி.
2. வளர் - கொடி - யன = கருவிளங்கனி.
3. குழை
―
மா - தவி = புளிமாங்கனி.