112
-
இளங்குமரனார் தமிழ் வளம் – 13
இ- ள்.) ஈரசைச் சீர் நின்று இனி வரும் சீரோடு நேர் அசை ஒன்றல் இயற்சீர் நின்று வரும் சீர் முதலசையொடு நேரசை ஒன்றுவதூஉம், நிரை அசை ஒன்றல் என்று - நிரையசையாய் ஒன்றுவதூஉம் என்று, ஆயிரு வகைத்தே ஆசிரியத்தளை ஆசிரியத்தளை அவ்விரண்டு வகைப்படும் என்றவாறு.
'இனி வரும் சீர்’ என்று சிறப்பித்த அதனால், வரும் சீரும் இயற்சீரே வந்து ஒன்றுவது சிறப்புடைத்து. வரும் சீர் யாதானும் ஆகப்பெறும்.
வரலாறு :
(நேரிசை ஆசிரியப்பா)
“உள்ளார் கொல்லோ தோழி! முள்ளுடை
அலங்குகுலை ஈந்தின் சிலம்பிபொதி செங்காய்
துகில்பொதி பவளம் ஏய்க்கும்
அகில்படு கள்ளியங் காடிறந் தோரே”
-
ஐங்குறுநூறு. தனிப். 2
இஃது 'ஈரசைச்சீர் நின்று ஈரசைச்சீரோடு ஒன்றிய ப
சிறப்புடை ஆசிரிய நேர்த்தளை.
"திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி”
―
புறநானூறு. 2.
இஃது ஈரசைச்சீர் நின்று வேற்றுச்சீரோடு ஒன்றிய சிறப்பில் ஆசிரிய நேர்த்தளை.
266
(நேரிசை ஆசிரியப்பா)
“திருமழை தலைஇய இருள்நிற விசும்பின்
விண்ணதிர் *இமிழிசை முழங்கப்
பண்ணமைந் தவர்தேர் சென்ற வாறே
""
இஃது ஈரசைச்சீர் நின்று ஈரசைச்சீரோடு ஒன்றிய சிறப்புடை ஆசிரிய நிரைத்தளை.
366
(வெண்செந்துறை)
ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலிற் சிறந்தன் றொழுக்கம் உடைமை
- முதுமொழிக் காஞ்சி 1
இஃது ஈரசைச்சீர் நின்று வேற்றுச்சீரோடு ஒன்றிய
சிறப்பில் ஆசிரியத்தளை. என்னை?
1. “ஈரசை நாற்சீர் அகவற் குரிய”
2. இதன் முதலிரண்டடிகள் மலைபடுகடாம் 1-2. 3. கடல்.
(பா. வே) *இமிழின்