124
766
இளங்குமரனார் தமிழ் வளம் – 13
நாகம் 'சந்தனத் 'தழைகொண்டு 'நளிவண்டு கடிவ; நாகம் சந்தனப் பொதும்பிடை நளிர்ந்துதா துமிழ்வ; நாகம் செஞ்சுடர் நகுமணி உமிழ்ந்திருள் கடிவ;
நாகம் மற்றிது ‘நாகர்தம் உலகினை நகுமே ம
""
|
சூளாமணி, 749
இக்கலித்துறையுள் ஆசிரியத்தளையும், கலித்தளையும்
வெண்டளையும் மயங்கி வந்தவாறு கண்டுகொள்க.
.7
“கருவிப்° புட்டிலின் கண்டமும் மருவிப் பக்கரைப் போழ்களும் விரவிப் போர்க்கள வாயெலாம் புரவித் துண்டங்கள்' போர்த்தவே"
இவ்வஞ்சி விருத்தத்துள் ஆசிரியத்தளையும் வெண்டளையும் வந்தன. பிற பாவினங்களுள்ளும் தளை மயங்குமாறு வந்தவழிக் கண்டு கொள்க.
“வெள்ளையுட் பிறதளை விரவா; அல்லன எல்லாத் தளையும் மயங்கியும் வழங்கும்
என்பதனுள் ‘அல்லன எல்லாத் தளையும் மயங்கியும் வழங்கும், என்பது வேண்டா, 'வெள்ளையுட் பிறதளை விரவா,' என்பதனானே அல்லனவற்றுட் பிறதளை விரவும் என்பது பெறப்படும். என்னை? 'மேலைச்சேரிக் கோழி வென்றது' என்றால், ‘கீழைச்சேரிக் கோழி ஓடிற்று,' (என்பது பெறப் பட்டது. அல்லதூஉம், பிறரும், நன்பொது, 51 உரை) 0முக்கட் 10 கூட்டம் களவிற் கில்லை, என்றமையான், 'முக்கட் கூட்டம் கற்பிற்கு உண்டு,' என்பது பெறப்பட்டது என்று விரித்து உரைத்தார் ஆகலானும்,’ எனின், அவ்வகையால் எதிர் மறுத்தல் ஈண்டுப் பெறப்படுமே எனினும், 'விளங்கச் சொல்லல்' என்னும் நூல் மரபினாற் சொல்லப்பட்டதாம்.
66
ப
‘அற்றன்று,' 'வெள்ளையுட் பிறதளை விரவா,” என்ப னைச் சூத்திரமாகக் சூத்திரமாகக் கொண்ட பொழுது, வள்ளை என்பதனால் வெண்பாவும், வெண்பா இனமும் கொள்ளப்
1.
நான்கடிகளிலும் முதற்சீராக அமைந்த நாகம் என்னும் சொல், யானை, சுரபுன்னை, பாம்பு, மலை என்னும் பொருள்களைத் தந்தது 2. நேரொன்றாசிரியத்தளை. 3. நிரை யொன்றாசிரியத்தளை. 4. கலித்தளை. 5. இயற்சீர் வெண்டளை 6. நேரொன்றாசிரியத்தளை. 7. இயற்சீர் வெண்டளை. 8. நிரையொன்றாசிரியத்தளை 9. வெண்சீர் வெண்டளை. 10. களவியற் காரிகை.