இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
யாப்பருங்கலம்
வெண்பா ஒழித்துத் தளைவிரவும் ; செய்யுளாம் வெண்பாக் கலியுட் புகும்"
எனவும்,
'வெள்ளை ஒழித்தல் பாவொடு பாவினம்
சொல்லிய தளைசீர் வரைவில விரவும்”
எனவும் சொன்னார் பிறரும் எனக் கொள்க. (நேரிசை வெண்பா)
“நின்றசீர் ஈறும் வருஞ்சீர் முதலசையும்
ஒன்றியும் ஒன்றாதும் ஓசைகொள - நின்றால் வளையொன்று முன்கையாய் ! வந்ததனை வல்லோர்
தளையென்று கட்டுரைப்பார் தாம்
“அதிகண்டம் என்றும் இசையென்றும் சீரைப்
பதச்சேதம் என்றும் பகர்வர்; பதச்சேதம்
சந்தித் ததனைத் தளையென்பர் ; அத்தளையைப்
பந்தமென் பாரும் பலர்”
இவற்றை விரித்துரைத்துக் கொள்க.
தளை ஓத்து முடிந்தது.
127
(நாலடி நாற்பது)
யா. வி 32. மேற்.
(சு)