132
இளங்குமரனார் தமிழ் வளம் – 13 ♡
சீர் இறுதியாக வரும் அடியெல்லாம், பிறவும் வகுத்தனர் கொளலே - பத்துச் சீரின் மிக்குப் *பதின்மூன்று சீரின்காறும் வருவனவும் உள, அவற்றையும் கழிநெடிலடியின்பாற்படுத்து வழங்குக என்றவாறு.
‘கசடற என்பது ‘ஐயுறவு தீர’ என்பதனைச் சொல்லுமோ?' எனின், சொல்லும்; ‘ கற்க கசடற’ (திருக்குறள். 391) என்றார்
ஆகலின்.
6
கழிநெடிலடியே' என்றவழி ஏகாரம் பிரிநிலை. 'அஃது
எற்றிற் பிரிக்கப்பட்டதோ?' எனின்,
66
'குறளடி சிந்தடி அளவடி நெடிலடி
கழிநெடி லடியெனக் கட்டுரைத் தனரே'
என்னும் சூத்திரத்தினின்றும் பிரிக்கப்பட்டது ; ஏகாரம்' எனினும் அமையும்
கழிநெடி லடியே அறுசீர் முதலா ஐயிரண் டீறா
யா. வி. 23 சைநிறை
என்னாது, ‘கசடறக் கிளப்பின்' என்று மிகுத்துச் சொல்லிய அதனால், ‘எண்சீரின் மிக்கு வந்த செய்யுட்கள் சிறப்பில,' எனக் கொள்க.
“இரண்டு முதலா எட்டீ றாகத்
திரண்ட சீரான் அடிமுடி வுடைய;
இறந்தன வந்து நிறைந்தடி முடியினும் சிறந்த அல்ல செய்யு ளுள்ளே”
என்றார் பிறரும் எனக் கொள்க.
66
(காக்கை பாடினியார்)
'ஐயிரண் டீறா' என்று எடுத்து ஓதினமையால், ஒன்பதின் சீரடியும் பதின்சீரடியும் ' இடையாகு கழிநெடிலடி' எனப்படும். 'பிறவும்' வகுத்தனர் கொளலே' என்றமையான், பதின்சீரின் மிக்கு வருவன எல்லாம் ‘கடையாகு கழிநெடிலடி' எனப்படும் எனக் கொள்க.
766
அவற்றிற்குச் செய்யுள் வருமாறு:
(அறுசீர் ஆசிரிய விருத்தம்) இரைக்கும் அஞ்சிறைப் பேறவைகள் எனப்பெயர் இனவண்டு புடைசூழ
நுரைக்கள் என்னுமக் குழம்புகள் திகழ்ந்தெழ
நுடங்கிய 3 இலையத்தால்
1. ஒலிக்கும். 2. வண்டுகள். 3. கலப்பால்
(பா. வே) *பதினாறு.