134
இளங்குமரனார் தமிழ் வளம் – 13
வடங்கொள் மென்முலை நுடங்கு நுண்ணிடை மடந்தை சுந்தரி வனங்கொள் பூண்முலை தடங்கொள் தாமரை இடங்கொள் சேவடி
தலைக்கு வைப்பவர் தமக்கு வெந்துயர்
மகிழ்ந்தகோன்
தவிர்க்குமே
-யா. கா. 13. 29. மேற்.
இஃது ஒன்பதின்சீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள்.
(பதின்சீர் ஆசிரிய விருத்தம்)
"கொங்கு தங்கு கோதை ஓதி மாத ரோடு கூடி நீடும் ஓடை நெற்றி
வெங்கண் யானை வேந்தர் போந்து வேத கீத
நாத என்று நின்று தாழ
அங்க பூர்வம் ஆதி யாய ஆதி நூலின்
நீதியோடும் ஆதி யாய
செங்கண் மாலைக் காலை மாலை சேர்நர் சேர்வர்
சோதி சேர்ந்த சித்தி தானே”
யா. வி. 53. மேற்.
யா. கா. 13.29. மேற்
இது பதின்சீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள்.
(பதினொரு சீர் ஆசிரிய விருத்தம்)
“அருளாழி ஒன்றும் அறனோர் இரண்டும்
அவிர்சோதி மூன்றொ டணியோகு நான்கும்
மதமைந்தும் ஆறு பொருண்மேல்
மருளாழி போழும் நயமேழும் மேவி நலமெட்டும் பாடும் வகையொன்ப தொன்றே வரதற்கோ பத்தின் மகிழ
இருளாழி மாய எறியாழி அன்ன
எழிலாழி தன்னுள் எழுநாடர் ஓடி
இவர்கின்ற எல்லை அளவும்
உருளாழி செல்ல ஒளியானை மல்க
உலவாத செல்வ முடனாகி ஒண்பொன் உலகுச்சி சேர்வ துளதே'
இது பதினொருசீர்க் கடையாகு கழிநெடிலடியான் வந்த
செய்யுள்.
(பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்)
“கோளரி வாளரி வல்லிய மொல்லொலி
கொண்ட கொலைத்தொழில் எண்கொடு கேழல்கள்
கொட்கும் நெடுஞ்சிமை யுட்கிவர் மால்வரை
யாளியை அஞ்சிய வெஞ்சின மால்களி