166
இளங்குமரனார் தமிழ் வளம் – 13
- வடியமை எஃகம் வலவயின் ஏந்தித்
தனியே வருதி நீயெனின்,
மையிருங் கூந்தல் உய்தலோ அரிதே!’
- யா. கா. 41.மேற்
இஃது இரண்டாம் எழுத்தின்மேல் ஏறிய உயிர் ஒன்றிய எதுகை. இது 'செய்யுளியல் உடையார் காட்டும் பாட்டு.
(குறள் வெண்பா)
“பவழமும் பொன்னும் குவைஇய முத்தின் திகழரும் *பீன்றபுன் னை
99
“பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்'
இவை மூன்றாம் எழுத்து ஒன்றிய எதுகை.
(இன்னிசை வெண்பா)
2“ஊசி யறுகை யுறுமுத்தம் கோப்பனபோல்
மாசி யுகுபனிநீர் வந்துறைப்ப - மூசும்
முலைக்கோடு புல்லுதற்கொன் றில்லாதான் காண்மோ
விறக்கோடு கொண்டெறிக்கின் றேன்
யா. கா. 41. மேற்
திருக்குறள் 292
இந் நக்கீரர் வாக்கினுள் கடை யிரண்டடியும் மூன்றாம் எழுத்து ஒன்றி வந்தவாறு கண்டு கொள்க.
66
(நேரிசை வெண்பா)
அவிழ்ந்த *துணியசைக்கும் அம்பலமும் சீக்கும் மகிழ்ந்திடுவார் முன்னர் மலரும் - கவிழ்ந்து நிழறுழாம் யானை நெடுமான்றேர்க் கிள்ளி கழறொழா மன்னவர்தங் கை
―
தண்டியலங்காரம் 21. மேற்.
இப் பொய்கை வாக்கினுள்ளும் மூன்றாம் எழுத்து ஒன்றி வந்தவாறு கண்டுகொள்க. இதனை இரண்டாம் எழுத்தின்மேல் ஏறிய உயிர் ஒன்றினமையால், உயிர் எதுகை என்பாரும் உளர்.
1.
2.
(இன்னிசை வெண்பா)
"மனைக்குப்பாழ் வாணுதல் இன்மை; தான் செல்லும் திசைக்குப்பாழ் நட்டோரை இன்மை; இருந்த
“இது கையனார் காட்டிய பாட்டு” என்பது யா. கா. 41. மேற்.
இவ்வெண்பாவில் சிறிது வேறுபட்டுள்ள ஒரு பாடலை நக்கீரர் பாடலென விநோதரசமஞ்சிரி கூறுகிறது. தமிழறியும் பெருமான் காண்க.
(பா. வே) *வடிவமை. *பீன்றனபுன். *பீன்றபுன் *துணி யியைக்கும்.