172
இளங்குமரனார் தமிழ் வளம் – 13
அவர் கூறுமாறு :
"சீர்முழு தொன்றிற் றலையா கெதுகை, ஓரெழுத் தொன்றின் இடை ; கடை பிறவே”
என்றார் ஆகலின்.
66
அவை வருமாறு.
(நேரிசை வெண்பா)
'சிலை' விலங்கு நீள்புருவம் சென் றொசிய நோக்கி முலைவிலங்கிற் றென்று 'முனிவாள் - மலை விலங்கு தார்மாலை மார்ப ! தனிமை பொறுக்குமோ கார்மாலை 4கண்கூடும் போழ்து?
இது தலையாகு எதுகை.
66
(குறள் வெண்பா)
அகர முதல எழுத்தெல்லாம் ; ஆதி பகவன் முதற்றே உலகு
இஃது இடையாகு எதுகை.
66
- தண்டியலங்காரம் 16. மேற்.
(நேரிசை வெண்பா)
ஆவின் இடையர் விதையழிப்பர்; 'அவ்விதையைக் காமினோ !' என்றார் 5கதம்படுவர்; - நாமினிப் பொல்லா தெனினுமப் பூந்தோட்ட வாழ்நருங் கொள்ளாரா நஞ்சொற் குணம்”
து கடையாகு எதுகை.
66
―
மோனைக்கும் இவ்வாறே கொள்க. என்னை? ஒன்றினம் முடித்தல் தன்னினம் முடித்தல் என்றிவ் வகையால் யாவையும் முடியும்’
என்ப ஆகலின்.
யா. வி. 60 மேற்.
- திருக்குறள் 1
வரலாறு :
(குறள் வெண்பா)
“சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு
இது தலையாகு மோனை.
"மாவும் புள்ளும் வதிவயிற் படர
மாநீர் விரிந்த பூவும் கூம்ப
இஃது டை யாகு மோனை.
திருக்குறள் 267
- யா. வி. 35 மேற்.
1. விலங்குதல் - விலக்குதல். 2. வளைய. 3. ஊடுவாள். 4. சேருமிடத்து. 5. சினம்.