180
இளங்குமரனார் தமிழ் வளம் – 13
து பொருளும் பொருளும் முரணியது : ‘தீ’ என்னும் பொருட்கு 'நீர்' என்னும் பொருளும், 'வான்’ என்னும் பொருட்கு ‘நிலம்’ என்னும் பொருளும், 'நிலவு' என்னும் பொருட்கு ருள்' என்னும் பொருளும் மறுதலைப்பட முரணியது. (நேரிசை ஆசிரியப்பா)
“பெருமலைக் குறுமகள் *பிறிதோர்த்து நடுங்கலிற்
சிறுமை கூர்ந்த செல்சுடர் மாலையொடு
நெடுநீர் பொய்கைக் 'குறுநர் தந்த
தண்பனி அவிழ்மலர் நாறுநின்
கண்பனி துடைமார் வந்தனர் நமரே”
இது சொல்லும் பொருளும் சொல்லொடு முரணியது. ‘நெடுநீர்' என்புழி ‘நெடுமை' என்னும் சொல்லும் உண்டு ; நீரும் நெடிது. ‘குறுநர்தந்த' என்புழிக் ‘குறிது’ என்னும் சொல்லுண்டு; குறும் பொருள் இல்லை.
(நேரிசை ஆசிரியப்பா)
“செந்தீ யன்ன சினத்த யானை
நீர்நசை பெறாஅக் கானற்
றேர்நசைஇ ஓடும் ~சுரனிறந் தனரே!'
இது சொல்லும் பொருளும் பொருளொடு முரணியது. ‘செந்தீ’ என்புழிச் செம்மையும் உண்டு; “தீக்கட் செய்யது’ என்னும் சொல்லும் உண்டு ; ‘நீர் நசை பெறாஅ' என்புழிச் சொல் இல்லை ; முரணியது பொருள் எனக் கொள்க.
(நேரிசை ஆசிரியப்பா)
"ஓங்குமலைத் தொடுத்த தாழ்ந்திலங் கருவி
செங்குரல் ’ஏனற் பைங்கிளி இரியச் சிறுகுடித் ததும்பும் பெருங்கல் நாடனை
நல்லன் என்றும் யாமே;
தீயன் என்னுமென் தடமென் றோளே'
99
யா. வி. 43. மேற்.
இது சொல்லும் பொருளும் சொல்லொடும் பொரு ளொடும் முரணியது ‘செங்குரல்' என்புழிச் சொல்லும் உண்டு; 'செம்மை' குரற் கண்ணுமுண்டு. 'பைங்கிளி' என்புழிச் சொல்லும் உண்டு; ‘பசுமை’ கிளிக்கண்ணும் உண்டு. 'செம்மை' என்பதும்
1. பறிப்பார். 2. காடகன்றனர். 3. தினை.
(பா. வே) *பெருநிலக் *பிறிதோர்ந்து.