யாப்பருங்கலம்
197
செல்புனல் உடுத்த பல்பூங் கழனி
நல்வயல் ஊரன் வல்லன்
- ஒல்கா துணர்த்தும் பல்குறை மொழியே”
இது முதற்சீர்க் கண்ணும், மூன்றாஞ்சீர்க் கண்ணும் ரண்டாம் எழுத்து ஒன்றிவந்தமையால், பொழிப்பு எதுகை.
66
(நேரிசை ஆசிரியப்பா)
“ஓங்குமலைத் தொடுத்த தாழ்ந்திலங் கருவி
செங்குரல் ஏனற் பைங்கிளி இரியச்
சிறுகுடித் ததும்பும் பெருங்கல் நாடனை
நல்லன் என்றும் யாமே;
தீயன் என்னுமென் தடமென் றோளே
―
யா. வி. 38. மேற்.
இது முதற்சீர்க் கண்ணும் மூன்றாஞ்சீர்க் கண்ணும் மறுதலைப்படத் தொடுத்தமையால், பொழிப்பு முரண்.
(நேரிசை ஆசிரியப்பா)
“பெருங்கண் கயலே ; 2சீறியாழ் சொல்லே ;
3முருந்தம் பல்லே ; புருவம் வில்லே;
மயிலே மற்றிவள் இயலே;
4தண்கதுப் பறலே: திங்களும் நுதலே"
இது கடைச்சீர்க் கண்ணும் இரண்டாஞ்சீர்க் கண்ணும் ஈற்றெழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், பொழிப்பு இயைபு. (நேரிசை ஆசிரியப்பா)
66
சுறாஅக் 5கொட்கும் அறாஅ இருங்கழிக் °கராஅம் கலித்தலின் விராஅல் மீனினம் படாஅ என்னையர் வலையேஎ
கெடாஅ நாமிவை விடாஅம் விலைக்கே’
இது முதற்சீர்க் கண்ணும் மூன்றாஞ்சீர்க் கண்ணும் அளபெடுத்து ஒன்றி வரத் தொடுத்தமையாற் பொழிப்பு அளபெடை.
ஒரூஉத் தொடை.
(கக)
44. சீரிரண் டிடைவிடத் தொடுப்ப தொரூஉத்தொடை என்பது என் நுதலிற்றோ?' எனின், ஒரூஉத்தொடை
ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
1. சூழ்ந்த. 2. யாழ் வகையுள் ஒன்று. 3. மயிலிறகின் அடி; வெண்குருத்து 4. தண்ணிய கூந்தல் கருமணலே. 5. சுழலும். 6. முதலைகள் மிகுந்திருத்தலின்.
- ஒல்கா *னுணர்த்தும்.