யாப்பருங்கலம்
(நேரிசை ஆசிரியப்பா)
“குறுங்கால் 'ஞாழல் கொங்குசேர் நெடுஞ்சினை ஓங்குதிரை உதைப்ப மருங்கிற் றாழ்ந்த தண்ணந் துறைவன் பின்னிலை வெம்படர்
பரிந்து நாம் களையா மாயிற் பரியான்
பெருங்கடற் படப்பைநம் சிறுகுடிப்
பொங்குதிரைப்’> பெண்ணை மடலொடு வருமே"
199
இஃது இடை இரு சீர்க்கண்ணும் இன்றி, முதற்சீர்க் கண்ணும் கடைச்சீர்க்கண்ணும் மறுதலைப்படத் தொடுத் தமையால், ஒரூஉ முரண்.
(நிலைமண்டில ஆசிரியப்பா)
“பல்லே முத்தம் ; புருவம் வில்லே; சொல்லே அமுதம் ; அணங்கவள் நுதலே; இயலே எண்ணினும் தெரியினும் மயிலே; கயலே கண்ணும் ; நற் கூந்தலும் அறலே”
இஃது இடை இரு சீர்க்கண்ணும் இன்றி, முதற்சீர்க் கண்ணும் கடைச்சீர்க்கண்ணும் ஈற்று எழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், ஒரூஉ இயைபு.
66
(நேரிசை ஆசிரியப்பா)
‘வழாஅ *நெஞ்சிற்றந் தெய்வந் தொழாஅ
செறாஅச் செய்தியின் யாங்கணும் பெறாஅ
தேஎம் பல்பகல் ஒரீஇத்
தாஅம் செய்வதே செய்வ *மனாஅ
இது முதற்சீர்க்கண்ணும் கடைச்சீர்க்கண்ணும் அளபெழுந்து வரத் தொடுத்தமையால், ஒரூஉ அளபெடை
66
ஒரூஉத்தொடை,
இருசீர் இடைவிடில் என்மனார் புலவர்”
என்றார் அவிநயனார்.
45.
1.
கூழைத் தொடை
மூவொரு சீரும் முதல்வரத் தொடுப்பது கூழை என்மனார் குறியுணர்ந் தோரே.
புலிநகக் கொன்றை. 2. தோட்டம். 3. பனை.
(பா. வே) *நெஞ்சிற் றெய்வமும் தொழாஅள். *மெனாஅ.
(கஉ)