உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

‘என்பது என் நுதலிற்றோ?' எனின், கூழைத் தொடை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ.ள்) கடைச்சீர்க்கண் இன்றி, முதல் மூன்று சீர்க் கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பின், அவற்றைக் கூழை மோனை, கூழை எதுகை, கூழை முரண், கூழை இயைபு, கூழை அளபெடை என்று சொல்லுவர் புலவர் என்றவாறு.

பிறரும்,

"மூன்றுவரிற் கூழை; நான்குவரின் முற்றே"

என்றார் ஆகலின்.

வரலாறு:

(நேரிசை ஆசிரியப்பா)

"அருவி 'அரற்றும் அணிதிகழ் சிலம்பின் அரக்கின் அன்ன அவிழ்மலர்க் காந்தள் அஞ்சிறை அணிவண் டரற்றும் நாடன் 2அவ்வளை அமைத்தோள் அழிய

அகன்றனன் அல்லனோ அளியன் எம்மே

இது முதல் மூன்று சீர்க்கண்ணும் முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், கூழை மோனை.

(நேரிசை ஆசிரியப்பா)

“பொன்னின் அன்ன புன்னை நுண்டா தன்ன மென்பெடை தன்னிறம் இழக்கும் பன்மீன்' முன்றுறைத் தொன்னீர்ச் சேர்ப்பன் பின்னிலை ‘என்வயின் நின்றனன்

என்னோ நன்னுதல் ! நின்வயிற் குறிப்பே?”

து கடைச்சீர்க்கண் இன்றி, முதல் மூன்று சீர்க்கண்ணும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், கூழை எதுகை.

1.

66

(நிலை மண்டில ஆசிரியப்பா)

கரிய வெளிய செய்ய கானவர்

பெரிய சிறிய 'இட்டிய பிறழ்ந்த

நெடிய குறிய °நிகரில் நீலம்

ஒலிக்கும். 2. அழகிய வளையலும் மூங்கில் போலும் தோளும். 3. நீர்த்துறை. 4.என்னிடம்

5. சுருங்கிய. 6. நிகர் அளவானது; நெடுமையும் குறுமையும் இல்லது.