உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

LO

5

L டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலைய ஏழாம் வெளியீடாகக் காரிகை வெளிப்பட்டது. அது, ‘அமிர்த சாகரனார் அருளிச் செய்த யாப்பருங்கலக் காரிகை' என்னும் பெயர் தாங்கி வந்தது. மேலும், யாப்பருங்கலக் காரிகையின் ஆசிரியர் அமிர்தசாகரனார் என்பது, "இந்நூல் யாவரால் செய்யப் பட்டதோ எனின்..... அருந்தவத்துப் பெருந்தன்மை அமிர்தசாகரர் என்னும் ஆசிரியராற் செய்யப்பட்டது” என்பதனால் தெரிகிறது. அமிர்தசாகரர் என்ற சொல் அமுதசாகரர் என்றும் சுவடிகளில் காணப்படுகின்றது. யாப்பருங்கல விருத்தியின் பாயிரத்துள் இவர் பெயர் ‘அளப்பருங் கடற்பெயர் அருந்தவத்தோன்' என்று குறிக்கப் பெற்றுள்ளது. அளத்தற்கு அரிய கடலினது பெயர் எனவே, அஃது அமிதசாகரர் என்று இருத்தல் வேண்டும் என்று சிலர் கருதுவர். ஆனால், இந்நூலின் பரிசோதனைக்கு எடுத்துக் கொண்ட எல்லாச் சுவடிகளிலும் இப்பெயர் அமிர்தசாகரர் என்றோ, அமுதசாகரர் என்றோ காணப்படுகின்றதே ஒழிய ஒன்றிலும் அமிதசாகரர் என்ற பெயர் இல்லை. கிடைத்த யாப்பருங்கல ஏடுகளின் தலைப்பிலும் அமிதசாகரர் என்ற பெயர் இல்லை. வீரசோழிய உரையிலும் அமுத சாகரனார் என்றே எடுத்தாளப்படுகிறது” என்று காரிகையின் நூலாசிரியர் வரலாறு விளக்குகின்றது. (உ.வே.சா. நூல்நிலைய வெளியீடு-7.

1948).

நூலாசிரியரது வடமொழி இயற்பெயரை உணர்த்துவது அளப்பருங் கடற்பெயர்' என்றும், அளப்பரும் என்பது ‘அமித’ என்பதையும், கடல் என்பது சாகரம் என்பதையும் குறிப்பிட்டு அமிதசாகரர் என்ற ஆசிரியரை உணர்த்துவதாகும் என்றும் 1919 ஆம் ஆண்டில் ‘விவேக போதினி' தொகுதி 12 பகுதி 'இல் முதன்முதலாகத் திரு. அனவரத விநாயகம் பிள்ளை அவர்கள் எழுதினார்கள். திரு.ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களும் அளப்பருங்கடற்பெயர் உடையவர் அமிதசாகரனாரே என்பதைச் செந்தமிழில் கட்டுரை வழியால் நிறுவிக் காட்டியதுடன் தாம் திருத்தஞ்செய்து வெளியிட்ட காரிகைப் பதிப்பிலும் (கழகப் பதிப்பு) ‘அமித சாகரனார் இயற்றிய யாப்பருங்கலக் காரிகை' என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.

அமிதசாகரர் என்னும் பெயர் ஏடு எழுதியோர் பதிப்பித்தோர் ஆகியவர்களால் அமிர்தசாகரர், அமுதசாகரர் எனக் குறிக்கப் பெற்றாலும், அமிதசாகரர் என்னும் உண்மைப் பெயர் வழக்கும் அறவே மறைந்துபோய்விடவில்லை என்பது கல்வெட்டு ஒன்றால் வெளிப்பட்டுள்ளது.