யாப்பருங்கலம்
சேய்த்தன் றணித்தெனத் தேற்றவும் தேறாய் அகஞ்சுடப் புறஞ்செவி நிறுத்தனை கிடத்தல் சின்மொழிப் பல்லிருங் கூந்தல்
பெருந்தகு சீறடி நன்னுதல் ! தீதே”
207
இஃது எல்லாச்சீர்க்கண்ணும் மறுதலைப்படத் தொடுத் தமையால், முற்று முரண்.
(இன்னிசை வெண்பா)
கண்ணும் புருவமும் மென்றோளும் இம்மூன்றும் வள்ளிதழும் வில்லும் விறல்வேயும் வெல்கிற்கும் ;
பல்லும் பகரும் மொழியும் இவையிரண்டும்
முல்லையும் யாழும் இகும்
இஃது எல்லாச்சீர்க்கண்ணும் ஈற்றெழுத்து ஒன்றி வந்தமையால்' முற்று இயைபு.
66
(நேரிசை ஆசிரியப்பா)
குராஅம் விராஅம் பராஅம் உராஅம்
தொழாஅள் எழாஅள் விடாஅள் தொடாஅள்
இதோஒ இதோஒ என்மகள்
எலாஅ! எலாஅ! யாங்குற் றனளே?"
து சீர்தோறும் அளபெழுந்தமையால் முற்று அளபெடை பிறவும் அன்ன.
66
அவைதாம்,
முதலோ டயல்கொள்வ திணை; அயல் இன்றி
மூன்றாஞ் சீரது பொழிப்பிரண் டிடையிட் டிறுதியொடு கொள்வ தொரூஉ ; இறுதிச் சீரொழித் தேனைய தொன்றிற் கூழை; முதலீ றடைந்தவற் றின்மை இருவகைக் கதுவாய் ; முற்றும் நிகழ்வது முற்றே; முதலொடெட் டாகும் என்மனார் புலவர்
என்றார் பரிமாணனார். அவர் இயைபுத் தொடைக்கு விகற்பம் வேண்டிற்றிலர். என்னை?
“செந்தொடை இயைபிவை அல்லா 'நான்கும் முதற்சீர் அடியால் விகற்பம் கொள்ப
என்றார் ஆகலின்.
99
(பரிமாணனார்)
1. நான்கும், என்றது மோனை, எதுகை, முரண், அளபெடை என்பவற்றை என்க.