யாப்பருங்கலம்
211
பொழிப்பாதி ஐந்தாவன : பொழிப்பும், ஒரூஉம், செந் தொடையும், இரட்டைத் தொடையும், நிரனிறையும் என இவை. குறிப்புத் தொடையாவது, எழுத்து அல்லாது மொழிக் குறிப்பு ஓசை. அது மாத்திரை குறித்து அலகு பெற வைக்கப்படும் என்று வேண்டினமையான், அதனானும் தொடை கொள்ளப் படும்.
66
66
ருபத்திரண்டு தொடையாவன:
(குறள் வெண்பா)
அடிமோனை ஏனைக் கிளைமோனை என்று முடியுமாம் மோனைப் பெயர்”
(நேரிசை வெண்பா)
இரண்டாம் எழுத்தொன்றல் மூன்றாவ தொன்றால் திரண்டமைந்த சீர்முழுதும் - ஒன்றல் - முரண்டீர் கிளைவன்பால் மென்பால் இடைப்பால் உயிர்ப்பால் விளையும் எதுகையோர் எட்டு”
(COLDIT 6060T,2)
(எதுகை, 8)
“மொழியும் மொழியும் பொருளும் பொருளும்
மொழியும் பொருளும் மொழியோ - டழியாத
சொல்லும் பொருளும் பொருளொடு சொற்பொருளும்
சொல்லும் பொருளுமோர் ஐந்து”
(முரண், 5)
“பொழிப்பொரூஉச் செந்தொடை பொய்தீர் இரட்டை
அழிப்பில் நிரனிறையோ டைந்தும்- எழுத்தல்
குறிப்புத் தொடையியைபும் கொண்டுரைப்பார்க் கல்லால் நெறிப்படுமோ *நூலின் நிலை?”
(பிற தொடை,7)
ஐம்பத்தொரு நிலமாவன :
“வெள்ளை நிலம்பத் தகவல் பதினேழு
(நேரிசை வெண்பா)
துள்ளல் இருநான்கு தூங்கல்பத் - தெள்ளா
இருசீர் அடிமுச்சீர் ஐந்தாறே ழெண்சீர்
ஒருவா நிலமைம்பத் தொன்று
99
(நிலம், 51)
இவற்றால் அடியும், தொடையும், நிலமும் ஆமாறு
உரைத்துக் கொள்க.
(பா. வே) *தொன்னூல் நிலை.