உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப

ருச.

செய்யுள் இயல்

செய்யுள்களின் வகை

செய்யுள் தாமே மெய்பெற விரிப்பின்

பாவே பாவினம் எனவிரண் டாகும்.

இவ்வோத்து என்ன பெயர்த்தோ?' எனின், தொடை யினானும் அடியினானும் செய்யுள் உணர்த்திற்று ஆகலான், செய்யுள் ஒத்து' என்னும் பெயர்த்து.

"இவ்வோத்தினுள் இச்சூத்திரம் என் நுதலிற்றோ?' எனின், செய்யுள்களது பெயர் வேறுபாடும், அவற்றது எண்ணும் உணர்த்துதல் நுதலிற்று.

இ.ள்) செய்யுள் எனப்படுவனதாம், பொருள் பெற விரிக்குங்கால், பாவும் பாவினமும் என்று இரண்டு திறத்தனவாம் என்றவாறு.

‘தாம்' என்பது, செய்யுள்களைச் சிறப்பித்தற்குச் சொல்லப் பட்டது; 'தேவர் தாமே தின்னினும், வேம்பு கைக்கும்' என்றாற் போலக் கொள்க. அவ்வாறு சிறப்பிக்கவே, சொற் பொருள் உணர்வு வண்ணங்கள் தொடர்ந்து, குற்றமின்றி அவை தத்தமுள் தழுவும் கோள் உடையவாய், இன்பம் பெருக்கி, அம்மை முதலாகிய வனப்பு அலங்காரமும் செம்மையும் செறிவும் பெறுவுழிப் பெற்று, இம்மை மறுமைக்கு நன்மை பயந்து, எல்லார்க்கும் புலனுற நடை பெறுவது ‘யாப்பு, பாட்டு, செய்யுள்' என்று சொல்லப்படுவது ஆயிற்று. எனவே, ‘செய்யுள்’ எனப் பெயர் பெற்றும், ஓசைப் பொலிவு முதலாகிய உறுப் பொடு, புணர்ந்து, உரையும் நூலும் வகையும் மந்திரமும் முதுசொல்லும் பிசியும் ஆகிய செய்யுள் அல்ல,

1.

2.

நாலடி, 112.

2

“பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே

அங்கதம் முதுசொல்லோ டவ்வேழ் நிலத்தும் வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்

நாற்பெயர் எல்லை யகத்தவர் வழங்கும்

- தொல். செய். 78.

யாப்பின் வழிய தென்மனார் புலவர்