உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

237

சிறப்பித்துச் சொல்ல வேண்டியது என்னை? எனின், 'வெண்பா முதல் வந்து ஆசிரியமாய் இறுவன, சிறப்பின்மையால், மருட்பா என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது. என்னை? “வெள்ளை முதலா ஆசிரியம் இறுதி கொள்ளத் தொடுப்பது மருட்பா வாகும்'

என்றாகலின்.

(காக்கைபாடினியார்) யா. கா. 35. மேற். 35.மேற்.

அவ்வாறு வருவனதாம், புறநிலை வாழ்த்தும், வாயுறை வாழ்த்தும், செவியறிவுறூஉவும் என இவை. என்னை?

"புறநிலை வாயுறை செவியறி வுறூஉவெனத் திறநிலை மூன்றும் திண்ணிதிற் றெரியின், வெண்பா இயலினும் ஆசிரிய இயலினும் பண்புற முடியும் பாவின என்ப”

என்றாராகலின்.

தொல். செய். 159.

அவை வருமாறு:

(மருட்பா)

"தென்றல் இடைபோழ்ந்து தேனார் நறுமுல்லை முன்றில் முகைவிரியும் முத்தநீர்த் தண்கோளூர்க் குன்றமர்ந்த கொல்லேற்றான் நிற்காப்ப என்றும் தீரா நண்பிற் றேவர்

சீர்சால் செல்வமொடு பொலிமதி சிறந்தே

- யா. கா. 35. மேற்.

இது, 'வழிபடு தெய்வம் நிற்புறங் காப்பப் பழிதீர் செல்வமொடு ஒரு காலைக் கொருகாற் சிறந்து பொலிவாய்!’ (தொல். செய். 109) என்றமையான், புறநிலைவாழ்த்து மருட்பா.

(மருட்பா)

"பலமுறையும் ஓம்பப் டுவன கேண்மின்:

  • சொலன்முறைக்கட் டோன்றிச் சுடர் மணித்தேர் ஊர்ந்து நிலமுறையின் ஆண்ட நிகரில்லார் மாட்டும்

சிலமுறை அல்லது செல்வங்கள் நில்லா; இலங்கும் எறிபடையும் ஆற்றலும் அன்பும் கலந்ததம் கல்வியும் தோற்றமும் ஏனைப் பொலஞ்செய் புனைகலனோ டிவ்வாற னாலும்

1. “வெண்பா முதல்வந் தகவல்பின் னாக விளையுமென்றால் வண்பான் மொழிமட வாய்மருட் பாவென்னும் வையகமே

(பா. வே) *சொலன்முறைகட்.

யா. கா. 35.