உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

போய்விடவில்லை. தண்டியலங்கார மேற்கோள்களில் அபயன், அநபாயன் எனப் பெயர் வழங்கிய முதற் குலோத்துங்கனைப் பற்றிய பாடல்கள் பல உள. குலோத்துங்கன் பாடு புகழால் பக்கமெல்லாம் பரவியவன். அவனைப் பற்றிய பாடல்களுள் எதுவும் யாப்பருங்கல விருத்தியிலோ, யாப்பருங்கலக்காரிகை உரையிலோ இடம் பெற்றிலது, இதனால் இவ்வேந்தன் காலத்திற்கு முற்பட்டே இவ்வுரைகள் தோன்றி விட்டன என்று கோடல் தகும். ஆதலால், நூல்கள் தோன்றிய அணிமைக் காலத்திலேயே அவற்றின் உரைகளும் தோன்றி விட்டன என்க.

அருங்கலம் காரிகை இவற்றின் உரைகளுள் அருங்கல விருத்தியே முற்பட்டதாம். அருங்கலம் முதற்கண் செய்யப் பெற்றது போலவே அதன் உரையும் முதற்கண் எழுந்தது என்பதற்குத் தக்கசான்றுகள் உள.

அருங்கலத்தில் காரிகைச் செய்யுள்கள் காட்டப்பெற்று 'யாப்பருங்கலப் புறநடை' என்றோ ‘காரிகை' என்றோ குறிக்கப் பெற்றுள்ளனவே அன்றிக் காரிகை உரை குறிக்கப் பெற்றில. ஆனால் காரிகை உரையில்,

'மற்றும்' என்றதனால் பதின்சீரின் மிக்க அடியான் வரப் பெறுவனவும் (ஆசிரிய விருத்தம்) உளவெனக் கொள்க. அவை யாப்பருங்கல விருத்தியுட் கண்டு கொள்க” (13) என்றும், "இவற்றிற்கு (ஓசைகள்) இலக்கியம் யாப்பருங்கல விருத்தியுட் கண்டு கொள்க” (21) என்றும், “ஏழடியின் மிக்க பஃறொடை வெண்பா யாப்பருங்கல விருத்தியுள்ளும் தேசிகமாலை முதலிய வற்றுள்ளும் கண்டு கொள்க” (24) என்றும், “ஐந்தடி யானும் ஆறடியானும் வருவன (வேற்றொலி வெண்டுறை) யாப்பருங்கல விருத்தியுட்கண்டு கொள்க (27) என்றும், பதின்சீரின் மிக்கு வருவன வெல்லாம் (விருத்தம்) யாப்பருங்கல விருத்தியுட் கண்டு கொள்க (29) என்றும், வெள்ளைச் சுரிதகத்தால் இற்றன (கலி) யாப்பருங்கல விருத்தியுட்கண்டு கொள்க (30) என்றும், எட்டும் பதினாறுமாய் வருவன (அம்போதரங்கம்) யாப்பருங்கல விருத்தியுட் கண்டுகொள்க (30) என்றும், “பிறவும் (வெண்கலிப்பா) யாப்பருங்கல விருத்தியுட்கண்டு கொள்க காள்க” (31) என்றும், ஆசிரியத்தினோடும் வெண்பாவினோடும் மயங்கி வந்த மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா ‘காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள்' (கலி.39) என்னும் பழம்பாட்டினுள் மயங்கி வந்தவாறு யாப்பருங்கல விருத்தியுட் (86) கண்டுகொள்க என்றும், இவற்றுக்கு (கொச்சகம்) இலக்கியம் யாப்பருங்கல விருத்தியுட் கண்டு கொள்க (32) என்றும், இரணத்தொடைக்கும் என்ற

L