உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

ஒருபொருள் பற்றிய நூல்களிலும் முன்னோர் மொழியையும் பொருளையும் போற்றிக் கொள்வதே மரபு என்க.

766

ஆரியம் என்னும் பாரிரும் பௌவத்துக் காட்டிய அக்கரச் சுதகமும் மாத்திரைச் சுதகமும், பிந்துமதியும், பிரேளிகையும் முதலாக உடையனவும் இப்பெற்றியே தமிழாகச் சொல்லு மிறைக் கவிகளும் அறிந்து கொள்க" என்று யாப்பருங்கல விருத்தி கூறுகின்றது. இதில் உள்ள ஆரியம் என்னும் பாரிரும் பௌவம் என்னும் தொடரை ஆண்டு ‘2ஆரியம் என்னும் பாரிரும் பௌவத்தைக் காரிகை ஆக்கித் தமிழ்ப் படுத்திய அருந்தவத்துப் பெருந்தன்மை அமிதசாகரர்” என்று குறிக்கின்றது காரிகையுரை. ஆதலால், இரண்டன் உரையாசிரியரும்

ஒருவராகவே இருக்கலாம் என்பார் 3உளரென்பர்.

தலைமகனும் தலைமகளும் தமியராய் எதிர்ப்படும் காட்சியைக் “கற்கந்தும் எறிபோத்தும் கடுங்கண்யானையும் தறுகட்பன்றியும் கருவரையும் இருநிலனும் பெருவிசும்பும் அனையார்” எனத் தொடங்கி இறையனார் களவியல் கூறுமாறே முழுமையும் கூறிச் கூறிச் செல்கிறது களவியற்காரிகை! ஓரிரு பக்க உரைநடை முழுமையிலும் வேற்றுமை இல்லை! அதற்காகக் களவியல் உரைகாரரே, களவியற் காரிகைக்கும் உரைகாரர் என்பதா? அதற்கு எத்துணைத் தடைகள் உள. ஆதலால், முன்னவர் மொழியைப் பொன்னேபோற் போற்றிக் கொண்ட தன்மை இஃது என்க.

விருத்தியுரைகாரராலும், காரிகை உரைகாரராலும் மேற் கோள் காட்டப்பெறும் இலக்கண ஆசிரியர்களுள் ஒருவர் மயேச்சுரர். அவர் பெயரைக் காரிகை 'மயேச்சுரர்' என்றே வழங்குகின்றது. வேறு எவ்வகையாலும் குறிக்கவில்லை (14,17, 27, 29, 30, 32, 37 உரை காண்க) ஆனால், விருத்தியுரை மயேச்சுரர்க்கு நல்லாசிரியர், பேராசிரியர் என்னும் சிறப்புப் பெயர்களைத் தந்து மகிழ்வதுடன், எதுகைமோனை கெழும முழுமுதல் இறைவன் சிறப்புக்களையெல்லாம் அடைமொழியாக்கி அவன் பெயர் மகிழ்ந்த பேராசிரியர், நல்லாசிரியர் என்று பல இடங்களில் கூறுகின்றது.

ஒரே

ரே ஆசிரியரால்

இரண்டு உரைகளும் இயற்றப் பெற்றிருக்குமாயின் ஒரு புலவரை இவ்வாறு வேறுபடக் கூறார்

என்க.

1. யா. வி. பக்: 547

2. யா. கா. பாயிரம். உரை.

3. உரையாசிரியர்கள். திரு. மு. வை. அரவிந்தன் பக். 485.