உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

13

மண்டில ஆசிரியப்பா, நிலைமண்டில

ஆசிரியப்பா எனப்

பெயரிட்டு வழங்குவர் ஒருசார் ஆசிரியர் என்பது அறிவித்தற்கு

எனக் கொள்க. என்னை?

66

எழுவாய் இரட்டித் திறுதி ஒன்றாய்

வரினது மண்டில ஆசிரி யம்மே

என்றாராகலின்.

வரலாறு:

“முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே மலையன் ஒள்வேற் கண்ணி

முலையினம் வாராள் முதுக்குறைந் தனளே”

-சிற்றெட்டகம் (தமிழ்நெறி விளக்கம் 22. மேற்.)

யா. வி. 32. மேற்.

இது நேரிசை மண்டில ஆசிரியப்பா.

பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க.

(20)

நிலைமண்டில ஆசிரியப்பா

எச. ஒத்த அடியின ஆகியும் ஒற்றிற நிற்பவும் என்னும் நிலைமண் டிலமே.

இஃது

ஃது என் என் நுதலிற்றோ’ லிற்றோ' எனின், நிலைமண் டி ஆசிரியப்பா ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ.ள்) ஒத்த அடியின ஆகியும்- (நேரிசை, இணைக்குறள் போலாது) எல்லா அடியும் சீர் ஒத்து நின்றவாறே நின்று முடிவன ஆகியும், ஒற்று இற நிற்பவும் - அவ்வவற்று ஈற்றினும் யாதானும் ஓர் ஒற்றினையும் ஈறாக நிற்பனவும், என்னும் - ‘என்’ என்னும் அசைச்சொல் ஈறாக நிற்பனவும், நிலைமண்டிலமே - நிலை மண்டில ஆசிரியப்பா எனப்படும் என்றவாறு.

66

"நிற்பவும்' என்ற உம்மையான், நூற்பா நிலை மண்டில மும் பிறவும் ஏ, ஓ, ஈ, ஆ, ஐ என்னும் ஐந்து உயிரும் அல்லாப் பிற உயிரும் இசைவன எல்லாம் ஈறாகி வரப் பெறும் எனக் கொள்க.

வரலாறு:

(நிலைமண்டில ஆசிரியப்பா)

166 “வேரல் வேலி வேர்க்கோட் பலவின் சாரல் நாட ! செவ்வியை ஆகுமதி ; யாரஃ தறிந்திசி னோரே! சாரற்

1. மூங்கில் வேலி. *(பா. வே) முலையும் வாரா.